இந்தி தெரிந்தால்தான் கடன்.. திமிராக பேசிய ஜெயங்கொண்டம் வங்கி மேலாளர்.. அதிரடி இடமாற்றம்
அரியலூர்: ஜெயங்கொண்டத்தில் இந்தி தெரியவில்லை என்பதால் லோன் தரமாட்டேன் என கூறி ஓய்வு பெற்ற மருத்துவரின் விண்ணப்பத்தை நிராகரித்த வங்கி மேலாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மருத்துவத் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இவருக்கு ஜெயங்கொண்டம் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் நிறைய நிலங்கள், வீடுகள் உள்ளன.

பேருந்து நிலையம்
இந்த நிலையில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்ட பாலசுப்பிரமணியன் முடிவு செய்தார். இதையடுத்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் கேட்டு சென்றுள்ளார்.

ஆங்கிலம், தமிழ்
இந்த வங்கியில் பாலசுப்பிரமணியன் கணக்கும் வைத்துள்ளார். வங்கியில் தற்போது மகாராஷ்டிராவை சேர்ந்த விஷால் நாராயண் காம்ப்ளே என்பவர் கிளை மேலாளராக இருந்து வருகிறார். அவரை சந்தித்த பாலசுப்பிரமணியன் இடம் தொடர்பான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள், வருமான வரி செலுத்தும் படிவம் என அனைத்தையும் காண்பித்து லோன் வேண்டும் என ஆங்கிலம், தமிழில் பேசி கேட்டுள்ளார்.

இந்தி தெரியுமா
அதற்கு காம்ப்ளேவோ, உங்களுக்கு இந்தி தெரியுமா என கேட்டார். மேலும் இந்தி தெரிந்தால்தான் லோன் கொடுக்க முடியும் என கூறிவிட்டார். மீண்டும் மீண்டும் மொழி பிரச்சினை குறித்தே அந்த மேலாளர் பேசியதாக பாலசுப்பிரமணியன் புகார் அளித்தார்.

இந்தி
இதுகுறித்து திருச்சி மண்டல அலுவலருக்கு புகார் சென்றது. அப்போது அவரை நேரில் அழைத்து பேசிய போது விஷால் காம்ப்ளேவுக்கு இந்தியை தவிர ஆங்கிலம் தெரியாது என தெரியவந்தது. இதையடுத்து விஷாலை இடமாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்தரவிட்டார்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications