‛உல்லாசம்’.. அதுவும் கல்லூரி மாடியிலேயே! வெளியான வீடியோவால் மாணவி-மாணவன் எடுத்த விபரீத முடிவு! ஷாக்
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருந்த நிலையில் அதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும், மாணவனும் விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
இப்போது.. கல்லூரி காலத்தில் பலரும் காதலிக்க தொடங்கி விடுகின்றனர். சிலர் தங்களின் காதலன், காதலி மீதான அதீத நம்பிக்கையில் எல்லை மீறியும் நடந்து கொள்வதோடு தேவையில்லாத சிக்கலில் மாட்டி கொள்கின்றனர். அப்படியொரு சம்பவம் தான் தற்போது கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
கர்நாடகாவின் தாவணகெரே நகரில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தான் 2 ம் ஆண்டு படித்து வரும் மாணவனுக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். விடுமுறை தினங்களில் செல்போனில் பேசவும் செய்துள்ளனர். இந்நிலையில் தான் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாணவனும், மாணவியும் கல்லூரியில் உள்ள மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு யாருக்கும் தெரியாமல் இருவரும் நெருக்கமாகி உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதற்கிடையே தான் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருக்கும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியானது. அதாவது மாணவனும், மாணவியும் கல்லூரி மாடியில் சேர்ந்து இருந்ததை அருகே உள்ள கட்டடத்தில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து இருப்பதும், அந்த வீடியோ தான் வலைதளங்களில் பரவி வருவதும் தெரியவந்தது.
இதனை கல்லூரியில் உள்ள பிற மாணவ-மாணவிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் குறிப்பிட்ட அந்த மாணவனும், மாணவியும் மனம் உடைந்து போயினர். இதற்கிடையே அவமானத்தில் அந்த மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி அறிந்த மாணவனும் தற்கொலை செய்தார். இதுபற்றி அறிந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
மேலும் மாணவனும், மாணவியும் சேர்ந்து இருந்த வீடியோ வெளியானதால் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினரும் தெரிந்து கொண்டனர். இதையடுத்து குடும்பத்தினர் சார்பில் தனித்தனியாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோ எடுத்தது யார்?, சமூக வலைதளங்களில் பதிவிட்டது யார்? என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தாவணகெரேயில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications