கொரோனா வைரஸ் பாதித்த குடும்பத்தை பேட்டி எடுத்த 4 செய்தியாளர்கள்.. தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு
பெங்களூரு: இந்தியாவில் கொரோனா வைரஸால் முதல் முதலாக இறந்த முதியவரின் குடும்பத்தினரை நேர்காணல் செய்த 4 செய்தியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா தாக்கியிருக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் கலபுராகியைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஹைதராபாத்தில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பும் போது உயிரிழந்தார். ஆனால் முன்னதாக அந்த முதியவர் சவுதி அரேபியாவில் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 29ம் தேதி வரை இருந்தார். பிப்ரவரி 29ம் தேதி ஹைதராபாத் வந்தவர் அங்கிருந்து கர்நாடகா மாநிலம் கலபுராக்கிக்கு பயணம் செய்தார்.

அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் முடிவுகள் வரும் முன்பே அவரை அவரது குடும்பத்தினர் ஹைதராபாத்திற்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் மீண்டும் கலபுராக்கி திரும்பினார். வரும் வழியில் தான் உயிரிழந்தார்.
இதையடுத்து இறந்த முதியவரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் இறந்த முதல் இந்தியர் இவர் தான்என்பது உறுதியானது.
இந்நிலையில் இவரது குடும்பத்தினரை சோதனைக்கு பின்னர் நான்கு ஊடகவியலாளர்கள் சந்தித்து நேர்காணல் செய்திருந்தார்கள். இதையடுத்து நான்கு செய்தியாளர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதியவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவி வருவதால், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நான்கு செய்தியாளர்களையும் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 68 வயது பெண் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இதன்படி இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். 107 சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications