சூப்பர்! அரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்த இந்திய வானியலாளர்கள்.. ஏன் முக்கியம் தெரியுமா
பெங்களூர்: சர்வதேச விஞ்ஞானிகள் உடன் இணைந்து இந்திய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் மிகவும் அரிதான நட்சத்திர குடும்பத்தில் புதிய நட்சத்திரத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இந்திய வானியலாளர்கள் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு, எபிசோடிக் அக்ரிஷன் என்று அழைக்கப்படும் இளம் நட்சத்திரங்களின் மிகவும் அரிதான குழுவைச் சேர்ந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டறிந்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஆர்யபட்டா ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த இந்திய வானியலாளர்கள், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் அமைப்புகளை உள்ளடக்கிய சர்வதேச குழு ஆய்வாளர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்த ஆய்வில் தான் எபிசோடிக் அக்ரிஷன் குழுவின் இளம் நட்சத்திரமான "Gaia 20eae" என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த எபிசோடிக் அக்ரிஷன் என்பது ஒரு வட்டு வழியாக நட்சத்திரங்கள் குவிழும் செயல்முறையாகும். இதனால் அதன் எடை நிலையற்றதாக இருக்கும்.
இதுபோன்ற நிலையற்ற தன்மை நட்சத்திரத்தின் மீது வானில் இருக்கும் பிற பொருட்களை கொட்டுகிறது. இதனால் அது ஒளிரும் தன்மையையும் மாறுகிறது.
இது போன்ற அமைப்புகள் எப்படி உருவாகுகிறது என்பதைக் கண்டறிய உலகெங்கும் தீவிர ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதனால் இதுபோன்ற இளம் நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்ய ஆய்வாளர்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முதல்முறையாக விண்வெளியில் புதிய பகுதியில் இந்த "Gaia 20eae" கண்டறியப்பட்டு இருப்பதால், இது மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'தி ஆஸ்ட்ரோபிசிக் ஜர்னல்' எனும் இந்த ஆராய்ச்சி குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications