இந்தி.. நான் சொன்னதைத்தான் பிரதமர் மோடியும் சொல்லியிருக்காரு.. நடிகர் கிச்சா சுதீப் பரபரப்பு
பெங்களூர்: மொழி குறித்து நான் கூறிய கருத்தைத்தான் பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்திருக்கிறார் என கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இந்தி திணிப்புக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்தி திணிப்பை எதிர்த்து நடிகர்களும் பேச முன்வந்துள்ளனர். தென்னிந்திய மொழிகளில் உருவாகும் படங்கள் இந்தியிலும்உலக அளவிலும் கவனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனை புரிந்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட கன்னட நடிகர் கிச்சா சுதீப இந்தி தேசிய மொழி அல்ல என்று கருத்து தெரிவித்திருந்தார்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்
இதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், இந்திதான் நமது தாய் மொழி, தேசிய மொழி என தெரிவித்திருந்தார். அதன்பிறகு இருவரும் ட்விட்டரில் மாறி மாறி கருத்துகள் தெரிவித்ததால் பெரும் சர்ச்சையாக மாறியது. அஜயின் கருத்து வடஇந்திய நடிகர், நடிகைகளும் கிச்சாவின் கருத்துககு தென்னிந்திய நடிகர், நடிகைகளும் ஆதரவு தந்தனர்.

சர்ச்சை
இந்தி மொழி சர்ச்சை முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே இருக்கிறது. தமிழகததிலும் தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற பாஜக அலுவலக பொறுப்பாளரகளுக்கான மாநாடாட்டில் இணைய வழியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி.

இந்தியாவின் அடையாளம்
அப்போது அவர் பேசுகையில் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம்தான். கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்ப சில முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை பார்க்கிறது.

தேசியக் கல்விக் கொள்கை
தேசியக் கல்வி கொள்கையில் கூட அனைத்து பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின கருத்தை வரவேற்பதாக நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்தி இனி நமது தேசிய மொழி அல்ல என கூறி நான் கலகத்தையோ விவாதத்தையோ ஏற்படுத்தவில்லை.

பிரதமரின் வார்த்தைகள்
எந்த வித நோக்கமுமின்றி தன்னிச்சையாக நிகழ்ந்தது அது. எனது கருத்தை நான் முன் வைத்தேன். அவ்வளவுதான். பிரதமரின் வார்த்தைகளில் இது வெளிப்பட்டது ஒரு வித பெருமையாகவும் பாக்கியம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. நான் கன்னட மொழிக்காக மட்டும் பேசவில்லை. எல்லா மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் என பிரதமர் பேசிய கருத்தைத் தான் நானும் அன்றைக்கு முன் வைத்தேன். மோடியை அரசியல்வாதியாக மட்டும் பார்க்காமல் ஒரு தலைவராகவும் பார்க்கிறோம் என சுதீப் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை












Click it and Unblock the Notifications