இந்தி.. நான் சொன்னதைத்தான் பிரதமர் மோடியும் சொல்லியிருக்காரு.. நடிகர் கிச்சா சுதீப் பரபரப்பு
பெங்களூர்: மொழி குறித்து நான் கூறிய கருத்தைத்தான் பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்திருக்கிறார் என கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இந்தி திணிப்புக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்தி திணிப்பை எதிர்த்து நடிகர்களும் பேச முன்வந்துள்ளனர். தென்னிந்திய மொழிகளில் உருவாகும் படங்கள் இந்தியிலும்உலக அளவிலும் கவனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனை புரிந்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட கன்னட நடிகர் கிச்சா சுதீப இந்தி தேசிய மொழி அல்ல என்று கருத்து தெரிவித்திருந்தார்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்
இதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், இந்திதான் நமது தாய் மொழி, தேசிய மொழி என தெரிவித்திருந்தார். அதன்பிறகு இருவரும் ட்விட்டரில் மாறி மாறி கருத்துகள் தெரிவித்ததால் பெரும் சர்ச்சையாக மாறியது. அஜயின் கருத்து வடஇந்திய நடிகர், நடிகைகளும் கிச்சாவின் கருத்துககு தென்னிந்திய நடிகர், நடிகைகளும் ஆதரவு தந்தனர்.

சர்ச்சை
இந்தி மொழி சர்ச்சை முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே இருக்கிறது. தமிழகததிலும் தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற பாஜக அலுவலக பொறுப்பாளரகளுக்கான மாநாடாட்டில் இணைய வழியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி.

இந்தியாவின் அடையாளம்
அப்போது அவர் பேசுகையில் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம்தான். கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்ப சில முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை பார்க்கிறது.

தேசியக் கல்விக் கொள்கை
தேசியக் கல்வி கொள்கையில் கூட அனைத்து பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின கருத்தை வரவேற்பதாக நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்தி இனி நமது தேசிய மொழி அல்ல என கூறி நான் கலகத்தையோ விவாதத்தையோ ஏற்படுத்தவில்லை.

பிரதமரின் வார்த்தைகள்
எந்த வித நோக்கமுமின்றி தன்னிச்சையாக நிகழ்ந்தது அது. எனது கருத்தை நான் முன் வைத்தேன். அவ்வளவுதான். பிரதமரின் வார்த்தைகளில் இது வெளிப்பட்டது ஒரு வித பெருமையாகவும் பாக்கியம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. நான் கன்னட மொழிக்காக மட்டும் பேசவில்லை. எல்லா மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் என பிரதமர் பேசிய கருத்தைத் தான் நானும் அன்றைக்கு முன் வைத்தேன். மோடியை அரசியல்வாதியாக மட்டும் பார்க்காமல் ஒரு தலைவராகவும் பார்க்கிறோம் என சுதீப் தெரிவித்துள்ளார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications