Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேஸ் வாபஸ் பெற ரூ 50 ஆயிரம் டெபாசிட்! சாட்டை துரைமுருகன் போனை பாருங்க.. நடிகை விஜயலட்சுமி பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகனின் செல்போனை ஆராய்ந்தாலே சீமான் என்னுடன் பேசியது வெளிச்சத்துக்கு வரும் என நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார்.

தன்னை திருமணம் செய்து கொண்டு தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு தன்னை சீமான் ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். அந்த புகாரை அவர் தன்னால் போராட முடியவில்லை என கூறி வாபஸ் பெற்றுவிட்டார்.

Actress Vijayalakshmi says that Seeman gave rs 50000 to withdraw the case

இருந்தாலும் சீமானுக்கு ஏற்கெனவே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய நிலையில் தன் மனைவி கயல்விழியுடன் சீமான் ஆஜரானார். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு விசாரணை நிறைவடைந்தது.

இதையடுத்து சீமான் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 2 பெண்களால் நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன். 13 ஆண்டுகளாக வழக்கு போட்டு என்னை வன்கொடுமை செய்தனர். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய வீரலட்சுமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

நான் விஜயலட்சுமியை திருமணம் செய்து கொண்டதாகத்தான் புகார் அளித்தார்கள். ஆனால் இப்போது ரூ 60 லட்சம் பணம், நகையை நான் பெற்றுக் கொண்டதாக சொல்கிறார் என சீமான் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக விஜயலட்சுமி கூறுகையில் சீமான் மீது நான் கூறிய புகார்களை நிரூபிப்பேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் புகார்களை வேண்டுமானால் என்னால் நிரூபிக்க முடியாமல் போகலாம். ஆனால் மற்ற விஷயங்களை எல்லாம் என்னால் நிரூபிக்க முடியும்.

வீரலட்சுமியின் வீட்டிலிருந்து நான் வெளியேறிய போது சாட்டை துரைமுருகனிடம் பேசினேன். அப்போது தம்பி சாட்டை துரைமுருகன்தான் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியனை அனுப்பி வைத்தார். நான் இரு நாட்கள் டைம் கேட்டேன். ஆனால் அவர் இரவோடு இரவாக போக வேண்டும் என கூறினார்.

புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு அக்காவுடன் ஊருக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தவரே சாட்டை துரைமுருகன்தான். என் வங்கிக் கணக்கில் ரூ 50 ஆயிரம் போட்டிருந்தார்கள். என்னையும் அக்காவையும் பெங்களூருக்கு அனுப்பி வைத்ததே சாட்டை துரைமுருகன்தான். அவருடைய போனை ஆராய்ந்தாலே சீமான் என்னுடன் பேசியது தெரியும்.

நான் சாட்டையுடன் நடத்திய சாட்டுகளை எல்லாம் வைத்திருக்கிறேன், தேவைப்பட்டால் போலீஸிடம் காட்டுவேன். என் மீது சீமான் மான நஷ்ட ஈடு வழக்கு போடுவதாக சொல்கிறார். அப்படி போட்டாலும் நான் ஆதாரத்தை காட்டுவேன். என்னை பொய் சொல்லும்பெண்ணாக சித்தரித்தால் இந்த மோதல் முடிவுக்கே வராது என விஜயலட்சுமி கடுமையாக விமர்சித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+