சக்சஸ்.. சக்சஸ்! அதற்குள் வேலையை தொடங்கியது ஆதித்யா எல்-1.. இஸ்ரோ வெளியிட்ட மாஸ் அறிவிப்பு
பெங்களூர்: சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளது என இஸ்ரோ கூறியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக அமைந்துள்ளது ஆதித்யா எல்1 எனும் திட்டம். அதாவது இந்த திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும். காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.
இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் கருவிகளுடன் ஆதித்யா எல்1 விண்கலம் PSLV-C57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கடந்த 2ம் தேதி காலை 11.50 மணியளவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் இது என்பதால் உலக நாடுகளே இந்த மிஷன் மீது மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருந்தன. ஆதித்யா எல்1 விண்வெளியில் ஏவப்பட்ட நிலையில், அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள எல்1 எனும் புள்ளியில் நிலைநிறுத்தப்படும்.
இந்த புள்ளிக்கு விண்கலம் சென்றடைய 125 நாட்கள் வரை ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த விண்கலம் கவண் கல் எறிதல் தொழில்நுட்பம் மூலம் எல் 1 புள்ளியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆதித்யா எல்1 புவி சுற்றுவட்டப் பாதையை 4வது முறையாக கடந்த 15ம் தேதி வெற்றிகரமாக உயர்த்தியுள்ளது இஸ்ரோ. இதன் மூலம் ஆதித்யா எல்1 குறைந்தபட்சமாக பூமிக்கு 256 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 1,21,973 கி.மீ தொலைவிலும் சுற்றி வருகிறது. இது வரும் 19ம் தேதியன்று புவியின் ஈர்ப்பு விசையிலிருந்து லாக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி பயணிக்கும்.
இப்படி இருக்கையில் ஆதித்யா எல் 1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளது என இஸ்ரோ கூறியுள்ளது. அதாவது இந்த விண்கலத்தில் சூப்ரா தெர்மல் & எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர் (STEPS) கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. பூமியை சுற்றி இருக்கும் அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகளை அளவிடுவதுதான் இதன் பணியாகும். பூமியை சுற்றி காந்த புலன் இருக்கிறது. இது மிகவும் ஆச்சரியமான ஒரு அம்சமாகும்.

சூரிய குடும்பத்தில் மொத்தம் 4 கோள்கள் தரை பரப்பை கொண்டிருக்கின்றன. மீதம் உள்ள 4 கோள்களும் வாயு கோள்களாகும். இப்படி தரை பரப்பு கொண்டிருக்கும் கோள்களில் புதன் மற்றும் பூமியில் மட்டும்தான் காந்த புலன்கள் இருக்கின்றன. புதன் கோளில் உயிர்கள் கிடையாது எனவே இங்கு காந்த புலன் இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனால் பூமியில் காந்த புலன் இருப்பதற்கு சில பிரயோஜனங்கள் இருக்கின்றன.
அதாவது சூரியனிலிருந்து வரும் மின் காந்த அலைகள் பூமியை தாக்காமல் இந்த காந்த புலன்தான் காப்பாற்றுகிறது. அந்த வகையில் தற்போது புவி வட்டப்பாதையில் சேகரித்த தரவு, பூமியின் துகள்கள், காந்த புலன் பற்றிய பகுப்பாய்வை ஆதித்யா எல்1 தொடங்கியுள்ளது. இந்த பணியை STEPS கருவி மேற்கொண்டுள்ளது. அதேபோல இது அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடத் தொடங்கியுள்ளது. ஆதித்யா எல்1 விண்கலம் நாளை சூரியனின் எல்1 புள்ளியை நோக்கி நகர இருக்கும் நிலையில் தற்போது இந்த ஆய்வை செய்திருப்பது, விண்கலன் முழு திறனில் இயங்கி வருகிறது என்பதற்கான அர்த்தம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications