என்னது லிங்காயத்துக்களுக்கும் துணை முதல்வர் பதவி கிடையாதா? கடும் அதிருப்தியில் எம்பி பாட்டீல்
பெங்களூர்: கர்நாடகா காங்கிரஸ் அரசில் தலித்துக்கு துணை முதல்வர் பதவி தராவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான ஜி.பரமேஸ்வரா எச்சரிக்கை விடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து லிங்காயத் சமூகத்துக்கும் துணை முதல்வர் பதவி மறுப்பதா? என மற்றொரு மூத்த தலைவர் எம்பி பாட்டீல் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சியில் முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் ஆகியோர் நீண்ட இழுபறிக்குப் பின் தேர்வாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். மாநில ஆளுநரும் ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுத்தார். பெங்களூருவில் மே 20-ந் தேதி சித்தராமையா, டிகே சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பங்கேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.

கர்நாடகா காங்கிரஸ் அரசில் 3 துணை முதல்வர் பதவிகள் வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் டெல்லியில் இடைவிடாது நடந்த ஆலோசனையில் டிகே சிவகுமாருக்கு மட்டுமே துணை முதல்வர் பதவி என இறுதி செய்யப்பட்டது. இதனால் துணை முதல்வர் பதவியை எதிர்பார்த்திருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
71 வயதாகும் ஜி.பரமேஸ்வரா, குமாரசாமி தலைமையிலான மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசில் துணை முதல்வராக இருந்தார். மேலும் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 8 ஆண்டுகாலம் பதவி வகித்தவர். தமக்கு துணை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது தொடர்பாக ஜி.பரமேஸ்வர் கூறியிருப்பதாவது: டிகே சிவகுமார் தெரிவித்த கருத்து அவரது பார்வையில் சரியாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் மேலிடத்தின் கருத்து வேறானது. தலித்துகளின் எதிர்பார்ப்புகள் அடிப்படையில் காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்க வேண்டும். தலித்துகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் போனால் இயற்கையாகவே எதிர்விளைவுகளை சந்தித்துதான் ஆகவும் வேண்டும். பின்னர் நடக்கப் போகும் நிகழ்வுகளுக்கு வருந்தி பயனில்லை. இப்போதே பிரச்சனையை சரி செய்து கொள்வதுதான் சரியாக இருக்கும். இல்லை எனில் கட்சிக்கு பிரச்சனைதான் வரும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது அவர்களுக்கு புரியும். இவ்வாறு பரமேஸ்வரா கூறியிருந்தார்.
ஜி.பரமேஸ்வரின் இந்தப் பேட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் லிங்காயத் சமூகத்துக்கும் துணை முதல்வர் பதவி இல்லை என்பதால் அதனை எதிர்பார்த்த மூத்த தலைவர் எம்பி பாட்டீல் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர். அதனால் துணை முதல்வர் பதவி மற்றும் 5 முக்கிய துறைகளுடன் அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். காங்கிரஸில் மொத்தம் 9 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால் முஸ்லிம்களுக்கும் துணை முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது.
சித்தராமையா முதல்வர்; தலித்- லிங்காயத்- முஸ்லிம் ஆகிய சமூகங்களுக்கு துணை முதல்வர் பதவி என்கிற பார்முலாதான் முன்னர் பேசுபொருளாக இருந்தது. தற்போது டிகே சிவகுமாருக்காக ஒரே ஒரு துணை முதல்வர் பதவி மட்டும் வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருக்கிறது. இதுதான் இதர சமூகத்தினரை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது என்கின்றன கர்நாடகா தகவல்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications