Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஐஏ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் ராமேஸ்வரம் உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை என்ஐஏ அதிகாரிகள் இப்போது கைது செய்துள்ளனர்.

இம்மாத தொடக்கத்தில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பு முதலில் விபத்தாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரே இது குண்டுவெடிப்பு என்பது உறுதியானது.

After multi-state raids Bengaluru cafe blast key suspect arrested

தொடர்ந்து அங்கிருந்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். இந்தச் சூழலில் தான் இந்த வழக்கில் மிக முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முதல் கைது: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் குண்டு வைத்தாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரைத் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் முஸம்மில் ஷரீப் என அடையாளம் காணப்பட்டுள்ளது. என்ஐஏ அதிகாரிகள் கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5, உத்தரப்பிரதேசத்தில் ஒன்று என மொத்தம் 18 இடங்களில் ரெய்டு நடத்திய நிலையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முசாவிர் ஷசீப் ஹுசைன் என்பவர் தான் இந்த குண்டுவெடிப்பை அரங்கேற்றியதாக என்ஐஏ அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல இந்த வழக்கில் குற்றவாளியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அப்துல் மதீன் தாஹாவும் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். இந்த இரு நபர்களும் தலைமறைவாக உள்ளனர். இப்போது கைது செய்யப்பட்ட முஸம்மில் ஷரீஃப், சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்குத் தேவையான logistical உதவிகளைச் செய்து இருக்கிறார்.

சோதனைக்குப் பின் கைது: கடந்த மார்ச் 17ஆம் தேதி புதன்கிழமை சந்தேகிக்கப்படும் இந்த மூன்று நபர்கள் உள்ளிட்ட சிலரது வீடுகள் மற்றும் கடைகளைக் குறிவைத்து சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் ​​பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் பெருந்தொகையும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் இப்போது என்ஐஏ அதிகாரிகள் முதல் கைதை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெல்லாரியை சேர்ந்த ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்ததாகத் தகவல் பரவியது. இருப்பினும், அந்தத் தகவலை என்ஐஏ அதிகாரிகள் மறுத்து இருந்தனர். இந்தச் சூழலில் தான் இப்போது இந்த முதல் கைது நடந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதில் இந்த சதிச் செயலின் மூளையாக இருந்தது யார் உள்ளிட்ட பல கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன நடந்தது: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை முதலில் பெங்களூர் போலீஸ் விசாரித்த நிலையில், பின்னர் இது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. சிசிடிவி காட்சிகள் வைத்துப் பார்க்கும் போது தொப்பி, மாஸ்க் அணிந்து இருந்த அந்த நபர் வெறும் 9 நிமிடத்தில் குண்டை வைத்துவிட்டுக் கிளம்பியது தெரிய வந்தது.

அதன் பிறகு தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த நபர் தொடர்ந்து பொது பேருந்துகளில் பயணித்ததும் பல முறை தனது உடைகளையும் தோற்றத்தையும் மாற்றியதும் தெரிய வந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+