"விசாலாம் தர முடியாது".. அயோத்தி ராமர் சிலை வடித்த சிற்பிக்கே இந்த நிலையா? வேலையை காட்டிய அமெரிக்கா
பெங்களூர்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. சிரித்த முகத்துடன் கூடிய 5 வயது பால ராமர் சிலை கோவில் நிறுவப்பட்டது. இந்த சிலையை கர்நாடகாவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கி பெருமை பெற்றார். இந்நிலையில் தான் அமெரிக்கா செல்ல அருண் யோகிராஜ்க்கு அந்நாட்டு அரசு விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
500 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பிரதமர் மோடி பங்கேற்று கோவில் கருவறையில் நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார்.

ராமர் கோவில் கருவறையில் 5 வயது பால ராமர் சிலை சிரித்த முகத்துடன் இருக்கிறார். கடந்த ஜனவரி 23ம் தேதி முதல் அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் ஏராளமானவர்கள் கோவிலில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோவில் சிலையை செதுக்கிய சிற்பியின் பெயர் அருண் யோகிராஜ். இவர் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்தவர். இவர் தான் சிரித்த முகத்துடன் கூடிய பால ராமர் சிலையை வடிவமைத்தார். இந்த சிலை பக்தர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. குறிப்பாக அந்த சிலையின் கண்கள் அனைவரையும் சிலிர்க்க வைக்கிறது.
இந்தியாவின் சிறப்பான சிற்பி என ஏற்கனவே அருண் யோகிராஜ் பெயர் பெற்றுள்ள நிலையில் ராமர் சிலையை உருவாக்கியதன் மூலம் உலகளவில் புகழ் பெற்றுள்ளார். இத்தகைய சூழலில் தான் தற்போது அயோத்தி கோவிலுக்கு ராமர் சிலையை வடிவமைத்து கொடுத்த அருண் யோகிராஜூக்கு அமெரிக்கா செல்ல விசா மறுக்கப்பட்டுள்ளது.
அதாவது அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1ம் தேதி வரை அக்காக உலக கன்னட மாநாடு (AKKA World Kannada Conference) நடைபெற உள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள கிரேட்டர் ரிச்மண்ட் கன்வென்ஷன் மையத்தில் இந்த மாநாடு என்பது நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சிற்பி அருண் யோகிராஜை பாராட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநாட்டில் பங்கேற்க வரும்படி அருண் யோகிராஜூக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அருண் யோகிராஜ் தனது மனைவி விஜிதா மற்றும் குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார். விசாவுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் தான் அருண் யோகிராஜ் மற்றும் அவரது குடும்பத்துக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது. இருப்பினும் விசா வழங்க மறுத்ததற்கான சரியான காரணம் எதையும் அமெரிக்கா தெரிவிக்கவில்லை.
அயோத்தி ராமர் கோவிலுக்கான பால ராமர் சிலையை செய்து நிறுவிய பிறகு அருண் யோகிராஜ் வெளிநாடு எங்கேயும் செல்லாமல் இருந்தார். தற்போது நீண்டகாலத்துக்கு பிறகு அமெரிக்கா செல்ல முடிவு செய்தார். ஆனால் அமெரிக்கா சார்பில் அவருக்கு விசா வழங்க மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications