முதுகை தடவிய குற்றச்சாட்டுக்கு அர்ஜுன் மறுப்பு.. ஸ்ருதி மீது மான நஷ்ட வழக்கு தொடருவதாக அறிவிப்பு
Recommended Video
பெங்களூர்: நடிகை ஸ்ருதி ஹரிகரன் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் தன் முதுகு மீது கை வைத்து தடவினார் என்று, கன்னட இளம் நடிகை ஸ்ருதி ஹரிகரன் தெரிவித்த குற்றச்சாட்டு கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விருவரும் நடித்த கன்னட திரைப்படம் ரிலீசாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது ஸ்ருதி Metoo இயக்கத்தின் மீதான தூண்டுதலால் இந்த குற்றச்சாட்டை சுமத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கன்னட டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், அர்ஜுன் கூறியதாவது: ஸ்ருதி ஏன் இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார் என்று எனக்கு புரியவில்லை. அந்த திரைப்படத்தில் ஸ்ருதியுடன் நெருக்கமான காட்சிகள் இருந்ததால், ரிகர்சல் கூட வேண்டாம், நெருக்கமாக நடிக்க தயாரில்லை என்று நான் கூறியிருந்தேன். மொத்தமே 5 நாட்கள்தான் ஸ்ருதியுடன் நான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது ஸ்ருதி இவ்வாறு கூறுவது ஏன் என்று தெரியவில்லை.
அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ருதி! .. யார் இவர்?.. பின்னணி என்ன?
எனவே, ஸ்ருதி மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். metoo என்பது தவறான விஷயங்களுக்கு பயன்பட ஆரம்பித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.