Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கமே, ஒரு முத்தம் கொடு பேபி.. பெண் ரவுடியிடம் வழிந்த இன்ஸ்பெக்டர்.. அப்பறம் என்னாச்சு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ஒரு போலீஸ்காரர் தந்த பாலியல் கொடுமைதான் இணையத்தில் றெக்கை கட்டி பறக்கிறது.. அதுவும் முத்தம் கேட்டுள்ளார் போலீஸ்காரர்.. இத்தனைக்கும் அந்த பெண், ஒரு பிரபல ரவுடியாம்.. இந்த நியூஸ்தான் தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது.. போலீசார் இது தொடர்பான விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

யஷஸ்வினி கௌடா என்ற பெண் பெங்களூரை சேர்ந்தவர்.. அந்த பகுதியில் பிரபலமான ஒரு பெண் ரவுடியும்கூட.. இந்த பெண்ணுக்கு 45 வயதாகிறது..

Bangalore inspector news Bengaluru police controversy woman rowdy case viral inspector video crime news Bengaluru police misconduct India viral Tamil news inspector romance issue shocking police story Bengaluru viral case

இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் கடத்தல் வழக்கு ஒன்றில் இவர் கைது செய்யப்பட்டார்.. இவர் பிரபல ரவுடி என்பதால், காவல் துறை அவரை ஒரு "குற்றவாளிப் பட்டியலில்" வைத்துள்ளனர்.. அதனால் இவரை "ரவுடி ஷீட்டர்" என்று அழைப்பார்களாம்..

பெங்களூர் இன்ஸ்பெக்டர்

இந்த ரவுடி பெண்ணுக்கும், இன்ஸ்பெக்டர் பாப்பண்ணாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த பழக்கத்தை சாதகமாகப் பயன்படுத்தி இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா, யஷஸ்வினிக்கு வாட்ஸ்-அப் மூலம் தொடர்ந்து ஆபாசமான குறுந்தகவல்களை அனுப்பி வந்துள்ளார்..

பெண் ரவுடி யஷஸ்வினி கௌடாவிடம் மிகத் தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது.. ஒருகட்டத்தில் பாப்பண்ணாவின் டார்ச்சர் அதிகரித்துவிடவும், அதற்கு மேல் பொறுக்க முடியாத பெண் ரவுடி, இது தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த்குமார் சிங்கிடம் புகார் தந்துவிட்டார்.. அந்த புகார் மனுவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாம்..

பெண் ரவுடி - முத்தம்

அத்துடன், இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா, ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்றையும் பெண் ரவுடி போலீசில் ஆதாரமாக தந்துள்ளார்.. இந்த ஆடியோதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது..

அதில் யஷஸ்வினியை அவர் "யஷ் நீ என் தங்கம்", "பேபி" என்று செல்லமாக அழைத்துப் பேசியுள்ளார்.. மேலும் ஒரு படி மேலே போய், "என் பெயரை பாப்பண்ணா என்று கூப்பிடாதே.. சுருக்கமாக பாப்பு என்று தான் கூப்பிட வேண்டும்" என்கிறார்..

அதற்கு யஷஸ்வினி, "நீங்கள் ஒரு இன்ஸ்பெக்டர், உங்களை எப்படி நான் பாப்பு என்று கூப்பிடுவேன்?" என்று கேட்டதற்கு, "என்னை இன்ஸ்பெக்டர் என்று சொன்னால் உன் வீட்டுக்கே வந்து உதைப்பேன்" என்று மிரட்டியதும் அந்த ஆடியோவில் தெளிவாக உள்ளது..

இதுமட்டுமின்றி, செல்போனில் பேசும்போது யஷஸ்வினியிடம் ஆபாசமாகப் பேசிய பாப்பண்ணா, அவரிடம் முத்தம் கொடுக்கும்படி கேட்டு நச்சரித்துள்ளார்.. இந்த விவகாரத்தை யாரிடமாவது சொன்னால் கூலிப்படையை ஏவி உன்னைக் கொலை செய்து விடுவேன் என்றும் அந்த அதிகாரி மிரட்டல் விடுத்ததாக யஷஸ்வினி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்..

பெங்களூரு அதிர்ச்சி சம்பவம்

இந்த புகாரோடு சேர்த்து தன்னிடம் உள்ள ஆபாச மெசேஜ்கள், போட்டோக்கள் உள்ளிட்டவைகளையும், போலீஸ் கமிஷனரிடம் அந்த பெண் ஒப்படைத்துள்ளார்.. இந்த விவகாரம் குறித்து ஜெயநகர் உதவி காவல் ஆணையர் தலைமையில் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

ஆனால், இந்தச் சம்பவம் பெங்களூரு காவல்துறை வட்டாரத்தில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.. ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் அதிகாரி, ரவுடி ஒருவருடன் இவ்வளவு நெருக்கமான மற்றும் ஆபாசமான தொடர்பில் இருந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+