நெஞ்சுவலியால் பலியான பிஎம்டிசி பஸ் டிரைவர்.. 50 பேரை காப்பாற்ற கண்டக்டர் செய்த செயல்! என்ன ஸ்பீடு
பெங்களூர்: பெங்களூரில் பிஎம்டிசி அரசு பஸ்சை ஓட்டி சென்றபோது டிரைவர் நெஞ்சுவலியால் சரிந்து விழுந்து இருக்கையில் இறந்தார். இதை கவனித்த கண்டக்டர் உடனடியாக டிரைவர் இருக்கையில் குதித்து அமர்ந்து பஸ்சை நிறுத்தி 50 பேரின் உயிரை காப்பாற்றினார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
பெங்களூரில் பிஎம்சிசி எனும் மாநகர அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த பஸ்கள் பெங்களூர் மற்றும் பெங்களூர் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பிஎம்டிசி போக்குவரத்து கழகத்தின் 40வது டெப்போவில் கிரண் குமார் (வயது 30) டிரைவராக பணியாற்றி வந்தார். அதேபோல் ஓபலேஷ் என்பவர் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தான் இருவரும் இன்று பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களா - தாசனபுரா இடையேயான வழித்தடத்தில் பஸ்சை இயக்கி வந்தனர். பஸ்சை கிரண் குமார் ஓட்டினார். ஓபலேஷ் கண்டக்டராக பணியில் இருந்தார். பஸ் நெலமங்களாவில் இருந்து தாசனபுரா நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 50 பயணிகள் பயணித்தனர்.
இன்று காலை 11 மணியளவில் யஷ்வந்தரபுரத்தில் சென்றபோது திடீரென்று டிரைவர் கிரண் குமார் தனது இருக்கையில் இருந்து அப்படியே சரிந்து விழுந்தார். இதை கண்டக்டர் ஓபலேஷ் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் டிரைவர் இருக்கையை நோக்கி ஓடிவந்த நிலையில் முன்னால் சாலையோரம் நின்ற பஸ் மீது மோதியது.
BMTC driver dies of heart attack, conductor's presence of mind saves lives.
— Pinky Rajpurohit 🇮🇳 (@Madrassan_Pinky) November 6, 2024
Earlier today, The driver Kiran died of a heart attack while driving a BMTC Bus. The bus was going from Nelamangala to Yeshwantpur. He started having chest pain while driving the bus. The conductor… pic.twitter.com/teM4spf2rF
அதோடு பஸ் நிற்காமல் தொடர்ந்து சாலையில் சென்றது. அப்போது சுதாரித்த கண்டக்டர் ஓபலேஷ் ஸ்டியரிங்கை பிடித்து கண்ட்ரோல் செய்தார். இதனால் பஸ் சாலையிலேயே சென்றது. அதன்பிறகு அவர் டிரைவர் சீட்டுக்கு ஜம்ப் செய்து அமர்ந்து பிரேக்கை பிடித்தார். இதனால் பஸ் விபத்தில் சிக்காமல் நின்றது. மேலும் பஸ்சில் இருந்த 50 பயணிகளும் காயமின்றி தப்பித்தனர்.
இதையடுத்து கண்டக்டர் ஓபலேஷ் டிரைவர் கிரண் குமாரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு கிரண் குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பஸ் ஓட்டியபோது ஏற்பட்ட நெஞ்சுவலியால் அவர் பலியானதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே தான் ஓடும் பஸ்சில் டிரைவர் கிரண் குமார் நெஞ்சு வலியால் சரிந்து விழுவதும், கண்டக்டர் ஓபலேஷ் சமயோசித்தமாக யோசித்து பஸ்சை நிறுத்தியதும் பஸ்சுக்குள் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவானது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் கண்டக்டர் ஓபலேசை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications