கொத்து கொத்தாக கொரோனா நோயாளிகள்.. பரிசோதனையில் அம்பலம்.. பெங்களூரின் தாராவி, ஹொங்கச்சந்திரா நிலை இது
பெங்களூர்: பெங்களூரின் தாராவி போல மாறிவிட்டது ஹொங்கசந்திரா ஏரியா. கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருந்த பெங்களூரில் இந்த பகுதி மட்டும் ஒரு கிளஸ்டராக மாறிவிட்டது.
பீகாரை சேர்ந்த 54 வயது தொழிலாளிக்கு முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இது ஏழைகள் வாழும் பகுதி என்பதால், நெருக்கமாக பல வீடுகள் இருக்கின்றன. எனவே, நோயாளி பலருடன் தினசரி தொடர்பில் இருந்துள்ளார். அதை கண்டுபிடிப்பதுதான் இப்போது பெருநகர் பெங்களூர் மாநகராட்சி ஊழியர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

குறிப்பிட்ட ஏரியா சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நோயாளி 15 நாட்களுக்கும் மேலாக சுதந்திரமாக அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். எனவே, ஏற்கனவே வைரஸ் வேறு பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, தெற்கு பெங்களூர் பகுதியில், கொரோனா வைரசை பரப்பும் முக்கிய பகுதியாக ஹொங்கச்சந்திரா மாறியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
நோயாளியின் 23 முதன்மை தொடர்புகளை நேற்று முன்தினம், அதிகாரிகள் கண்டறிந்தனர். நேற்று, இந்த எண்ணிக்கை 153 என்ற அளவுக்கு அதிகரித்தது. 30 இரண்டாம் நிலை தொடர்புகள் பரிசோதித்து பார்க்கப்பட்டன.
இந்த சோதனைகள் முடிவில் இதுவரை 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற தொடர்புகளுக்கு எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அல்லது பாதிப்பு ஏற்படாமலும் போகலாம். எனவே அவர்கள் ஓட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Recommended Video
பீகார் தொழிலாளி வசித்த வீட்டின் மிக நெருக்கத்தில் சுமார் 200 பேர் வசிக்கிறார்கள். பெரும்பாலும் வட மாநில தொழிலாளர்கள். இதுதவிர கணிசமான தமிழர்களும் இங்கே வசிக்கிறார்கள். ஏரியா சீல் வைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications