அலறவிட்ட பெங்களூர்.. கோழி அறுப்பது போல.. யாரிந்த பெண்? சொல்லியும் கேக்கலயே.. ஐயோ கோழிக்கடை மஞ்சுநாத்
பெங்களூர்: ஆணவ கொலையால் அதிர்ந்து போயுள்ளது கர்நாடக மாநிலம்.. பெற்ற மகள் என்றுகூட பார்க்காமல் இந்த அக்கிரமத்தை செய்துள்ளார் தந்தை.
நாளுக்கு நாள் ஆணவ கொலைகள் தமிழகத்தை போலவே அண்டை மாநிலங்களிலும் பெருகி வருகிறது.. கடந்த மாதம், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் 2 ஆணவ கொலைகள் அரங்கேறி, பலரையும் உலுக்கி எடுத்துவிட்டது. அம்மாநில முதல்வர் வரை விவகாரம் சென்றது.

பழக்கவழக்கங்கள்: ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதி அமைப்பு, சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகவே இத்தகைய குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்களுக்கு தனது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் சித்தராமையா உறுதியளித்திருந்தார்.
இதோ இன்னொரு கொடுமை நடந்துள்ளது..பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத்.. 45 வயதாகிறது.. கோழிக்கடை வைத்திருக்கிறார்.. இவருக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.. மூத்த மகள் பெயர் கவனா.. 20 வயதாகிறது.. இரண்டாவது பெண்ணுக்கு 17 வயதாகிறது..
காதலன்: இந்த 17 வயது பெண், வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்திருக்கிறார்.. விஷயம் வீட்டிற்கு தெரிந்ததும், மகளை மஞ்சுநாத் கண்டித்துள்ளார்.. இதனால், கடந்த 10ம் தேதி, வீட்டை விட்டு, வெளியேறிய பெண், தன்னுடைய காதலனை அழைத்துக் கொண்டு, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார்...

ஆனால், பெண்ணுக்கு 17 வயது மட்டுமே ஆவதாலும், பாதுகாப்பு கருதியும், காப்பகத்திற்கு அந்த பெண்ணை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மூத்த மகள் கவனா, தானும் இன்னொரு இளைஞரை காதலிப்பதாகவும், அவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்று சொல்லி, மஞ்சுநாத் தலையில் இன்னொரு இடியை தூக்கி போட்டார். இதைக்கேட்டு மஞ்சுநாத் அதிர்ச்சியில் உறைந்துபோனார்..
வாக்குவாதம்: தயவுசெய்து காதலை கைவிடுமாறு மகளிடம் கெஞ்சினார்.. கண்டித்தார்... வாக்குவாதம் செய்தார்.. ஆனால், எக்காரணம் கொண்டும் காதலை கைவிட மாட்டேன் என்று திடமாக சொல்லிவிட்டார் கவனா. இந்த வாக்குவாதம் தந்தைக்கும் மகளுக்கும் முற்றிக்கொண்டே போனது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மஞ்சுநாத், இரும்பு கம்பியை எடுத்து வந்து, மகளின் தலையில் தாக்கியதில், உயிரிழந்தார் கவனா.. இதைப்பார்த்த மஞ்சுநாத், நேராக, விஸ்வநாதபுரம் போலீசுக்கு சென்று சரணடைந்துவிட்டார்..
மகளை கொன்றதாகவும் வாக்குமூலம் தந்தார். பிறகு போலீசார் வீட்டிற்கு சென்று, கிடந்த கவனாவின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. மஞ்சுநாத்திடம் இப்போது விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

கொடூரம்: முன்னதாக, மகளை இரும்புக்கம்பியால் அடித்ததுமே, சம்பவ இடத்திலேயே சுருண்டு மயங்கி விழுந்துள்ளார் கவனா.. மகள் மயக்கத்தில் இருக்கும்போதே, கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, கவனாவின் கழுத்தை அறுத்துவிட்டாராம் மஞ்சுநாத். அதற்கு பிறகு, கை , கால்களில் பலமுறை வெறி தீர கத்தியால் குத்தியுள்ளார்..கண்ணெதிரிலேயே மகள், ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறப்பதை பார்த்தபிறகுதான், போலீஸிடம் சரணடைந்தாராம் மஞ்சுநாத்..!!
விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ந்தாலும்கூட, ஆணவ கொலைகளின் எண்ணிக்கைகள் குறைவதில்லை.. கல்வி ஒன்றே அனைத்தையும் மாற்றும் என்று நம்பிகொண்டிருந்தால், அப்படியும் இந்த கொலைகள் குறையவில்லை..
ஆணவ கொலைகளுக்கான சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற கருத்துக்கள், நம்முடைய நாட்டில் விடாமல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.. நாளுக்கு நாள் பெருகி வரும் இந்த ஆணவ கொலைக்கு நிரந்தமான, விடையும், விடிவும் தான் என்ன???
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications