Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலறவிட்ட பெங்களூர்.. கோழி அறுப்பது போல.. யாரிந்த பெண்? சொல்லியும் கேக்கலயே.. ஐயோ கோழிக்கடை மஞ்சுநாத்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஆணவ கொலையால் அதிர்ந்து போயுள்ளது கர்நாடக மாநிலம்.. பெற்ற மகள் என்றுகூட பார்க்காமல் இந்த அக்கிரமத்தை செய்துள்ளார் தந்தை.

நாளுக்கு நாள் ஆணவ கொலைகள் தமிழகத்தை போலவே அண்டை மாநிலங்களிலும் பெருகி வருகிறது.. கடந்த மாதம், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் 2 ஆணவ கொலைகள் அரங்கேறி, பலரையும் உலுக்கி எடுத்துவிட்டது. அம்மாநில முதல்வர் வரை விவகாரம் சென்றது.

Bangalore, incident and why did father take this sudden decision over Intercaste love

பழக்கவழக்கங்கள்: ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதி அமைப்பு, சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகவே இத்தகைய குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்களுக்கு தனது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் சித்தராமையா உறுதியளித்திருந்தார்.

இதோ இன்னொரு கொடுமை நடந்துள்ளது..பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத்.. 45 வயதாகிறது.. கோழிக்கடை வைத்திருக்கிறார்.. இவருக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.. மூத்த மகள் பெயர் கவனா.. 20 வயதாகிறது.. இரண்டாவது பெண்ணுக்கு 17 வயதாகிறது..

காதலன்: இந்த 17 வயது பெண், வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்திருக்கிறார்.. விஷயம் வீட்டிற்கு தெரிந்ததும், மகளை மஞ்சுநாத் கண்டித்துள்ளார்.. இதனால், கடந்த 10ம் தேதி, வீட்டை விட்டு, வெளியேறிய பெண், தன்னுடைய காதலனை அழைத்துக் கொண்டு, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார்...

Bangalore, incident and why did father take this sudden decision over Intercaste love

ஆனால், பெண்ணுக்கு 17 வயது மட்டுமே ஆவதாலும், பாதுகாப்பு கருதியும், காப்பகத்திற்கு அந்த பெண்ணை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மூத்த மகள் கவனா, தானும் இன்னொரு இளைஞரை காதலிப்பதாகவும், அவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்று சொல்லி, மஞ்சுநாத் தலையில் இன்னொரு இடியை தூக்கி போட்டார். இதைக்கேட்டு மஞ்சுநாத் அதிர்ச்சியில் உறைந்துபோனார்..

வாக்குவாதம்: தயவுசெய்து காதலை கைவிடுமாறு மகளிடம் கெஞ்சினார்.. கண்டித்தார்... வாக்குவாதம் செய்தார்.. ஆனால், எக்காரணம் கொண்டும் காதலை கைவிட மாட்டேன் என்று திடமாக சொல்லிவிட்டார் கவனா. இந்த வாக்குவாதம் தந்தைக்கும் மகளுக்கும் முற்றிக்கொண்டே போனது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மஞ்சுநாத், இரும்பு கம்பியை எடுத்து வந்து, மகளின் தலையில் தாக்கியதில், உயிரிழந்தார் கவனா.. இதைப்பார்த்த மஞ்சுநாத், நேராக, விஸ்வநாதபுரம் போலீசுக்கு சென்று சரணடைந்துவிட்டார்..

மகளை கொன்றதாகவும் வாக்குமூலம் தந்தார். பிறகு போலீசார் வீட்டிற்கு சென்று, கிடந்த கவனாவின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. மஞ்சுநாத்திடம் இப்போது விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

Bangalore, incident and why did father take this sudden decision over Intercaste love

கொடூரம்: முன்னதாக, மகளை இரும்புக்கம்பியால் அடித்ததுமே, சம்பவ இடத்திலேயே சுருண்டு மயங்கி விழுந்துள்ளார் கவனா.. மகள் மயக்கத்தில் இருக்கும்போதே, கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, கவனாவின் கழுத்தை அறுத்துவிட்டாராம் மஞ்சுநாத். அதற்கு பிறகு, கை , கால்களில் பலமுறை வெறி தீர கத்தியால் குத்தியுள்ளார்..கண்ணெதிரிலேயே மகள், ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறப்பதை பார்த்தபிறகுதான், போலீஸிடம் சரணடைந்தாராம் மஞ்சுநாத்..!!

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ந்தாலும்கூட, ஆணவ கொலைகளின் எண்ணிக்கைகள் குறைவதில்லை.. கல்வி ஒன்றே அனைத்தையும் மாற்றும் என்று நம்பிகொண்டிருந்தால், அப்படியும் இந்த கொலைகள் குறையவில்லை..

ஆணவ கொலைகளுக்கான சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற கருத்துக்கள், நம்முடைய நாட்டில் விடாமல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.. நாளுக்கு நாள் பெருகி வரும் இந்த ஆணவ கொலைக்கு நிரந்தமான, விடையும், விடிவும் தான் என்ன???

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+