மனைவி கிட்ட இருந்து காப்பாற்றுங்கள்.. பிரதமருக்கே நேரடியாக புகார் அளித்த பெங்களூர் "கணவர்".. கடவுளே!
பெங்களூர்: தனது மனைவி தன்னை தினந்தோறும் அடித்து சித்ரவதை செய்வதாகவும், கத்தியால் உடலில் வெட்டுவதாகவும் கூறி பெங்களூரைச் சேர்ந்த நபர் நேரடியாக பிரதமர் அலுவலகத்துக்கே புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தனது கைகளில் ரத்தம் வழியும் புகைப்படத்தையும் அந்த நபர் பதிவிட்டிருப்பதால் இந்த விவகாரத்தை தீவிரமாக அணுகுமாறு பெங்களூர் காவல்துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படமும், புகாரும் வைரல் ஆகியுள்ளதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு பாதுகாப்பு வழங்குமாறு நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொடுமைப்படுத்தப்படும் ஆண்கள்..
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறையும், பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதே சமயத்தில், பெண்களுக்கு ஏற்படும் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் நாட்டில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் குறைவான எண்ணிக்கையில் இவை நடைபெறுவதாலும், வெளியே கூறினால் தனக்கு அவமானமாகிவிடுமே என்ற எண்ணத்தில் சில ஆண்கள் இதை மறைத்து வைப்பதுமே இதுபோன்ற சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரியாமல் போகின்றன. மேலும், பெண்களுக்கு இருக்கும் சட்ட பாதுகாப்பு ஆண்களுக்கு இல்லாமல் இருப்பதும் இதுபோன்ற சம்பவங்கள் வெளிவராததற்கு காரணமாக கூறப்படுகிறது. அப்படியொரு சம்பவம்தான் பெங்களூரில் நடந்துள்ளது.

தினம் தினம் சித்ரவதை
சில தினங்களுக்கு முன்பு பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குக்கு ஒரு புகார் வந்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த யதுநந்தன் ஆச்சர்யா என்ற பெயரில் அந்த புகார் வந்திருக்கிறது. அதில், "எனது மனைவி தினம் தினம் என்னை சித்ரவதை செய்கிறார்; அடிக்கிறார்; கத்தியால் வெட்டுகிறார். இதுதான் நீங்கள் கூறும் பெண் சக்தியா? இதைதான் நீங்கள் ஊக்குவிக்கிறீர்களா?

ரத்தம் வழியும் புகைப்படம்
நான் அனுபவிக்கும் சித்ரவதைக்காக எனது மனைவி மீது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா? எடுக்கப்படாது. யாராவது எனக்கு உதவுவார்களா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் நான் ஒரு ஆண். அதனால் யாரும் எனக்கு யாரும் உதவ மாட்டார்கள்" என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தந் கையில் கத்தியால் வெட்டப்பட்டு ரத்தம் வழியும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

காவல்துறை அறிவுறுத்தல்
பிரதமர் அலுவலகத்துக்கு மட்டுமல்லாமல் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பெங்களூர் காவல் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றுக்கும் தனது ட்வீட்டை யது நந்தன் 'டேக்' செய்துள்ளார். இந்த புகாரும், புகைப்படமும் வைரல் ஆனதை அடுத்து, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூர் காவல்துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பெங்களூர் காவல் ஆணையர் பிரதாப் ரெட்டி, காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்குமாறு யது நந்தனுக்கு பதிலளித்துள்ளார். மேலும், அவரது முகவரியை பதிவிடுமாறும், சட்ட ரிதீயான நடவடிக்கையை போலீஸார் எடுப்பார்கள் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications