கட்டம் கட்டிய காங்கிரஸ் அரசு.. ராகுல் காந்தியை விமர்சித்து ட்வீட்.. பாஜக அமித் மால்வியா மீது வழக்கு
பெங்களூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து பாஜக ஐடி குழு தலைவர் அமித் மால்வியா ட்வீட் பதிவிட்டதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நிர்வாகி அளித்த புகாரின் பேரில் அவர் மீது பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் ஐடி குழு தலைவர் அமித் மால்வியாவுக்கு எதிராக கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமித் மால்வியா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதாவது, ராகுல் காந்தி ஆபத்தானவர், நயவஞ்சகமாக ஆட்டத்தை ஆடுகிறார் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதோடு 2 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றையும் ராகுல் காந்தியை விமர்சித்து தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அமித் மால்வியாவின் இந்த ட்வீட் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். சமூக வலைத்தளங்களில் அமித் மால்வியாவை விமர்சித்து பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், கர்நாட மாநில காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ரமேஷ் பாபு, அமித் மால்வியாவின் சர்ச்சை ட்வீட் குறித்து புகார் அளித்து இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் அமித் மால்வியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள ஹை கிரவுண் காவல் நிலையத்தில் பிரிவு 153 ஏ, 120 பி, 505(2) 34 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதல்வராக உள்ளார்.












Click it and Unblock the Notifications