கர்நாடக அரசுக்கு மேலும் ஒரு அடி.. பெங்களூர் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்க் ராஜினாமா!
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு மேலும் ஒரு அடி விழுந்துள்ளது. அந்த கட்சியின் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான, பெங்களூர் சிவாஜி நகர் எம்எல்ஏ ரோஷன் பெய்க் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம், கூட்டணி அரசிலிருந்து, ராஜினாமா செய்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் அமைச்சருமான, ராமலிங்க ரெட்டி, ரோஷன் பெய்க் உள்ளிட்ட பலருக்கும், அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் முஸ்லிம்கள் எப்போதுமே காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஏன் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.. பாஜக தீண்டத்தகாத கட்சி கிடையாது என்று கருத்து தெரிவித்தார் ரோஷன் பெய்க்.
சிவாஜி நகர் தொகுதி அதிகப்படியாக முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் வசிக்கக்கூடிய தொகுதி ஆகும். இந்த நிலையில் ரோஷன் பெய்க், இவ்வாறு கூறிய கருத்து காங்கிரஸ் தலைமையை கோபப்படுத்தியது. எனவே அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக ஒழுங்கு கமிட்டி முடிவெடுத்து அறிவித்தது.
இந்த நிலையில்தான், அவர், பெங்களூரில் தலைமைச் செயலகமான, விதானசவுதாவிற்கு, வந்து சபாநாயகர் ரமேஷ்குமாரை, சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், நான் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து உள்ளேன் என்று தெரிவித்து விட்டு கிளம்பினார்.
அடுத்ததாக பாஜகவில் சேர்வதற்கு திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்து விட்டார். இதனிடையே கடந்த சில நாட்களாக ராஜினாமா செய்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏகளின், எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த, மூவர் ராஜினாமா செய்துள்ளதால், கூட்டணி ஆட்சியில் இருந்து விலகியுள்ள, எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஏற்கனவே சட்டசபையில் எண்ணிக்கை பலத்தை இழந்து விட்டது கூட்டணி அரசு. இருப்பினும், இவர்கள் யாருடைய ராஜினாமா முடிவையும் இதுவரை சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை என்பதால், ஆட்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்னும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
பெங்களூரில் 5 வருட காதல் கணவனை மர்ம உறுப்பிலேயே... ஓங்கி மிதித்த பெண்.. அடுத்து நடந்த ட்விஸ்ட் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
"நாய்கள் குரைப்பதால் தூங்க முடியவில்லை".. புகாரளித்த பெண்.. போலீஸ் செய்த வேலையை பாருங்க -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?












Click it and Unblock the Notifications