26 எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'அந்த' பெயர்? மமதா, கெஜ்ரிவால் எதிர்ப்பு!பெங்களூரில் இன்று அறிவிப்பு?
பெங்களூர்: மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் பெங்களூரில் திரண்டுள்ள நிலையில் இந்த கூட்டணிக்கான பெயர் என்ன என்பது இன்று இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸை உள்ளடக்கி 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கடந்த மாதம் 23-ந் தேதி பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. இதனைத் தொடர்ந்து தற்போது மொத்தம் 26 கட்சிகள் பெங்களூரில் திரண்டுள்ளன.

26 எதிர்க்கட்சிகள் பங்கேற்பு: பெங்களூரில் நேற்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று 2-வது நாள் கூட்டத்தில் எதையெல்லாம் விவாதிப்பது என ஆலோசிக்கப்பட்டது.
அஜெண்டா: இன்றைய 2-வது நாள் கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பது? பொது செயல் திட்டத்தை எப்படஉருவாக்குவது, அனைத்து எதிர்க்கட்சிகளும் எப்படி ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்படுவது என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
கூட்டணி பெயர்: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயர் ஏற்கனவே உள்ளது. ஆனால் இந்த பெயருக்கு மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் புதிய பெயர் ஒன்ற தேர்வு செய்வது தொடர்பாக இன்று ஆலோசிக்கப்பட இருக்கிறது. தேசிய அளவில் ஐக்கிய முன்னணி, தேசிய முன்னணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என எதிர்க்கட்சிகள் கூட்டணி முன்னர் செயல்பட்டிருக்கிறது. இந்த பெயர்களை பிரதிபலிப்பது போல ஒரு புதிய பெயர் பரிசீலனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுசெயல் திட்டம்: மேலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கான பொது செயல் திட்டத்தை உருவாக்க ஒரு துணை குழுவை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. நாட்டில் முந்தைய கூட்டணிகள் பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டிருக்கின்றன. அதனையே முன்னுதாரணமாக கொண்டு பொதுசெயல் திட்டம் உருவாக்கப்படலாம்.
ஒருங்கிணைப்பு: அத்துடன் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தொடர்ந்து செயல்படுவதற்கான ஒரு தலைமை அலுவலகம் குறித்தும் இந்த தலைமை ஒருங்கிணைப்பு பணியை யார் மேற்கொள்வது என்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறத என்கின்றன பெங்களூர் தகவல்கள்.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது?












Click it and Unblock the Notifications