கல்லூரி மாணவரை பார்த்ததும் போலீஸ்காரருக்கு வந்த விபரீத ஆசை.. இப்போது ஜெயிலில்.. அதிர்ச்சி சம்பவம்
பெங்களூர்: பெங்களூர் சுதந்திர பூங்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர், அங்கு வந்த கல்லூரி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்த மாணவரின் தாய் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பெங்களூர் ஆர்டி நகர் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் யமுனா நாயக் . இவருக்கு வயது 30. இவர் பெங்களூர் சுதந்திர பூங்காவில் கண்காணிப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சுதந்திர பூங்கா என்பது பெங்களூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு போராட்டங்கள் நடக்கும். அரசு ஊழியர்கள், விவசாய சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் இங்கு அடிக்கடி போராட்டம் நடத்துவார்கள்.
இதனால் தான் எப்போதும் சுதந்திர பூங்காவில் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அந்த வகையில் தான் போலீஸ்காரர் யமுனா நாயக் சுதந்திர பூங்காவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு பியூ கல்லூரியில் படிக்கும் மாணவர் வந்தார். அப்போது போலீஸ்காரர் யமுனா நாயக் அவரிடம் தவறாக நடந்துள்ளார்.
கல்லூரி மாணவரிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவர் அதிர்ச்சியடைந்தார். யமுனா நாயக்கிடம் இருந்து தப்பிய மாணவர் அங்கிருந்து வீட்டுக்கு சென்றார். தனது தாயிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தார். இதுபற்றி உடனடியாக உப்பார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் யமுனா நாயக்கை கைது செய்தனர்.
அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து யமுனா நாயக் பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். யமுனா நாயக் இதுபோன்ற செயலில் இதற்கு முன்பும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதனால் அப்படி ஏதாவது குற்றத்தில் அவர் ஈடுபட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications