நடுராத்திரி.. நிசப்தம்.. வெள்ளை துணி.. கழுத்தை கடித்த பேய்.. பதறி கதறிய மனிதர்கள்.. ஓடிவந்த போலீஸ்
பெங்களூருவில் மக்களை அச்சுறுத்திய 7 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்
Recommended Video
பெங்களூரு: நடுராத்திரி.. படு நிசப்தம்.. வெள்ளை துணி.. முழுசும் ரத்தம்.. அப்படியே வந்து ரோட்டில் தூங்கி கொண்டிருந்த மனிதர்களின் கழுத்தை கடித்ததுமே.. அலறி அடித்து கொண்டு ஓடியுள்ளனர் மக்கள்!
பெங்களூரில் கூக்ளி பீடியா என்று ஒரு யூடியூப் சேனல் உள்ளது. இதை சில கல்லூரி மாணவர்கள் நடத்தி வருகின்றனர். இந்த சேனலில் பிராங்க் ஷோ அதாவது பொதுமக்களை ஏமாற்றி பிறகு குறும்பு செய்யும் நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்தனர்.
அதிலும் ஏதாவது வித்தியாசமாக செய்து, மக்களை ஏமாற்ற வேண்டும் என்று யோசித்தனர். இதற்காகவே வெளிநாடுகளில் செய்யப்படும் யூடியூப் வீடியோக்களை பார்த்து பார்த்து, நிறைய டிப்ஸ் எடுத்து வைத்து கொண்டனர். பிறகு ஒரு க்ளூ கிடைத்தது. அதாவது பேய் கெட்-அப் போட்டு மக்களை ஏமாற்றுவது!

பேய் கெட்அப்
இதையடுத்து, பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே ஷெரீப் பகுதியில் நிகழ்ச்சி பிளான் செய்யப்பட்டது. அந்த ரோட்டில் யார் வருகிறார்களோ, அவர்களை பேய் கெட்-அப் போட்டவர்கள் மிரட்டி ஓட வைத்து, அதனை கேமராவில் படம் பிடித்து சேனலில் போடுவது என முடிவெடுத்தனர்.

ரத்தக்கறைகள்
இதற்காக ஒருவர் பேய் கெட்-அப் போட்டுக் கொண்டார். ஒரு வெள்ளை துணி.. முழுசும் உடம்பெல்லாம் போர்த்தப்பட்டிருந்தது.. அதில் ரத்தக்கறைகள் இருப்பது போல செட்டப் செய்து கொண்டனர். கேமராவையும் மறைவாக ஒளித்து வைத்து கொண்டனர். எதிர்பார்த்தபடியே ரோட்டில் வந்து கொண்டிருந்தவர்களின் முன்னாடி திடீரென வந்து நின்று பயமுறுத்தி உள்ளனர்..

ஜாம்பி
இதில் பொதுமக்கள் தலைதெறிக்க பயந்து ஓடியும் உள்ளனர். இதில் என்ன விபரீதம் என்றால், ரோட்டோரம் படுத்து தூங்கும் அப்பாவிகளின் கழுத்தை ஜாம்பியோ போல கடித்து எழுப்பி, அவர்களை குலைநடுங்க செய்வது போல சத்தமிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த பகுதியில் பேய் இருப்பதாக நினைத்து கொண்டு பலர் வெளியே வராமலேயே இருந்துள்ளனர். அந்த இடத்தை மட்டும் எப்படியாவது கடந்து விட வேண்டும் என்று டூவீலரில் செல்வோர், உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக கடந்துள்ளனர்.

வீடியோ
விஷயம் போலீசுக்கு சென்றது.. பேய் நடமாட்டம் உள்ளது என்ற தகவலையும் மீறி துணிந்து தைரியமாக களம் இறங்கினார்கள்.. அப்போதுதான், சம்பந்தப்பட்ட 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். "ஸாரி ஸார்.. நாங்க சும்மா ஜாலிக்காகத்தான் வீடியோ எடுத்தோம்" என்று கதறி உள்ளனர். ஆனாலும் விடுமா நம்ம போலீஸ்.. இப்படி மக்களை அச்சுறுத்த, மாறுவேடம் போட்டு ஏமாற்ற, "அனுமதி வாங்கினீர்களா? இதயம் பலவீனமானவர்கள் இறந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு?" என்று கேள்வி கேட்டனர். மாணவர்கள் மீது இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications