பெங்களூர் பரபரப்பு.. ரகசியமாக ராணியுடன் வந்து சென்ற இங்கிலாந்து மன்னர்.. ஆயுர்வேத சிகிச்சை!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமீலாவுடன் ரகசியமாக வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூர் அருகே ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் 3 நாட்கள் தங்கி இருவரும் சிகிச்சை பெற்று இங்கிலாந்து திரும்பியதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி ராணி கமீலா இருவரும் கடந்த 27-ந் தேதி லண்டனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கர்நாடகா மாநிலம் பெங்களூர் வருகை தந்தனர். இந்த பயணம் ரகசியமானது என்பதால் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்ட போது எந்தவித அதிகாரப்பூர்வமான வரவேற்பும் தரப்படவில்லை.

பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தாமல் பொதுமக்களைப் போல சாலை மார்க்கமாக ஒயிட்பீல்டு அருகே உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு சென்று 3 நாட்கள் தங்கி ஓய்வெடுத்தனர்.
இந்த ஆயுர்வேத மையத்தில் மன்னர் சார்லஸ், ராணி கமீலா இருவருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆயுர்வேத சிகிச்சை காலத்துக்கான உணவுகளே இருவருக்கும் வழங்கப்பட்டன. நடைபயிற்சி, யோகா பயிற்சிகளையும் இருவரும் மேற்கொண்டனர். இதனையடுத்து நேற்று இருவரும் சிறப்பு விமானம் மூலம் லண்டன் திரும்பிச் சென்றனர். இங்கிலாந்து மன்னர், ராணியுடன் வந்து சென்ற தகவல்கள் தற்போதுதான் வெளியாகி இருக்கின்றன.
-
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
20 நாள் பொறுமையா இருந்தா ரூ.70 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்..!! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications