ஆஹா! வேலையை கச்சிதமாக செய்த ரோவர்.. நிலவில் வெப்பநிலை எந்த அளவு இருக்கு.. லேண்டர் அனுப்பிய மெசேஜ்
பெங்களூர்: நிலவின் மேற்பரப்பு வெப்ப நிலையை ஆய்வு செய்த தகவலை லேண்டர் அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ரோவரில் உள்ள ஆய்வு கருவி நிலவின் மேற்பரப்பு வெப்ப நிலையை ஆய்வு செய்துள்ளது.
இஸ்ரோ என்று சொல்லப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்வெளித்துறையில் பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக சந்திரயான் திட்டங்களின் மூலம் நிலவு குறித்த ஆராய்ச்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. சந்திரயான்1 மற்றும் சந்திரயான் 2 விண்கலனை அனுப்பி நிலவு குறித்த ஆராய்ச்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வந்ததது. இந்த நிலையில், கடந்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

40 நாட்கள் பயணம் மேற்கொண்ட இந்த சந்திரயான் விண்க கடந்த 23-ந் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவர் கருவி வெளியே வந்தது. இந்த ரோவர் கருவி தற்போது நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களை கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று இஸ்ரோ வெளியிட்ட தகவலில், பிரக்யான் ரோவர் சிறப்பாக இயங்கி வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டு இருக்கும் அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்படுகிறது" என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் வெப்ப நிலை எப்படி இருக்கும் என்ற தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் பல்வேறு ஆழங்களில் நிலவும் வெப்பத்தை பிரக்யான் ரோவர் பதிவு செய்துள்ளது. ரோவர் கருவியில் 10 விதமான சென்சார் கருவிகள் உள்ளன. இந்த சென்சார் கருவிகளே வெப்பநிலையை ஆய்வு செய்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 10 செ.மீ ஆழம் வரையிலான வெப்ப நிலை குறித்து ஆய்வு செய்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் சராசரி வெப்ப நிலை பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும். நிலவின் தென் துருவத்தில் நிலவும் வெப்ப நிலை குறித்து வரைபடம் மூலம் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதில், பல்வேறு ஆழங்களில் நிலவின் வெப்ப நிலை மாறுபடுவது தெரியவந்துள்ளது. ரோவரில் இருக்கும் ChaSTE எனப்படும் கருவி வெப்ப நிலையை ஆய்வு செய்துள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications