ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லணும்.. அதிர வைத்த குமாரசாமியின் ஆவேசம்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் ஹொன்னலகரே பிரகாஷ் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, கொலையாளிகளை ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பெரும் மன வேதனையில் கோபத்தில் தான் அவ்வாறு பேசியதாகவும், அதில் தவறு இல்லை என்றும் குமாரசாமி விளக்கியுள்ளார். குமாரசாமி பேசிய வீடியோ காட்சி பரவி வைரலாகி விட்டது. சம்பவ இடத்தில் நின்றபடி குமாரசாமி இவ்வாறு கூறினார்.
மத்தூர் நெடுஞ்சாலையில் வைத்து பிரகாஷை தடுத்த மர்ம நபர்கள் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
|
ஆவேச குமாரசாமி
சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்தார் குமாரசாமி. அப்போது தொலைபேசியில் யாருடனோ பேசிய அவர், பிரகாஷ் நல்ல மனிதர். அவரைக் கொன்று விட்டனர். யார் கொன்றது என்று தெரியவில்லை. கொன்றவர்களை இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்ல வேண்டும். ஒரு பிரச்சினையும் இல்லை என்று கூறினார் குமாரசாமி.

பேச்சு வைரல்
இந்தப் பேச்சு வைரலாகி விட்டது. இதுகுறித்து பின்னர் விளக்கிய குமாரசாமி, இது கோபத்தில் கூறுவது. இயற்கையானது. அது முதல்வராக எனது உத்தரவு அல்ல. சம்பவத்தை நேரில் பார்த்து, கோபத்தில் வந்த வார்த்தை அது.

எல்லோருக்கும் வரும் கோபம்
எல்லோருக்கும் இதுபோல கோபம் வருவது இயல்பானது. கொலையாளிகளில் இருவர் சிறையில் இருந்தவர்கள். பெயிலில் வெளியே வந்து கொலை செய்துள்ளனர் என்றார் குமாரசாமி.

பழிவாங்க கொலை
இந்தக் கொலை பழிக்குப் பழி கொலை என போலீஸார் கூறுகின்றனர். இன்னொரு மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் கொலை விவகாரத்தில் பிரகாஷுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதில்தான் பிரகாஷ் கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications