சுரங்க முறைகேடு.. குமாரசாமியை விசாரிக்க வேண்டும்! கர்நாடக ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரஸ் பேரணி
பெங்களூர்: சட்டவிரோதமாக சுரங்க உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக, மத்திய அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி இன்று ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியை நடத்தியுள்ளது. இதில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர் என பலர் பங்கேற்றனர்.
கர்நாடக மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வால்மீகி வாரிய நிதி முறைகேடுகளால் அமைச்சர் நாகேந்திரா பதவி இழந்திருந்தார். இப்போது 'மூடா' முறைகேடு வழக்கு கர்நாடக காங்கிரஸ் ஆட்சியை குடைய தொடங்கியுள்ளது.

அதாவது மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் மூலம், சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே இந்த மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, என்று சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
இந்த விளக்கத்தை ஏற்காத பாஜக, 'மூடா' குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தொடர்ந்து அம்மாநில ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தது. மேலும் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மைசூர் நோக்கி பேரணியை நடத்தியது. இதனையடுத்து இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதியளித்தார்.
இப்படி இருக்கையில், சட்டவிரோதமாக சுரங்க உரிமை அளித்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி மீதும், வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
அதாவது, கடந்த 2007ம் ஆண்டு முதல்வராக இருந்த போது, சட்ட விதிகளுக்கு மாறாக ஸ்ரீசாய் வெங்கடேஸ்வரா மினரல்ஸ் நிறுவனத்திற்கு சுரங்க உரிமம் வழங்கியது தொடர்பான விவகாரத்தில், குமாரசாமிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு 2023ல் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு லோக் ஆயுக்தாவின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) கடிதம் எழுதியிருந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 19ம் தேதியும் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
எனவே குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரஸ் பேரணியை நடத்தியுள்ளது. இதில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். இந்த பேரணியின் இறுதியில், ஆளுநரிடம் காங்கிரஸ் சார்பில் மனு கொடுக்கப்படும். இந்த பேரணியில் முதல்வர் சித்தராமையா பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பங்கேற்கவில்லை.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications