கண்ணுக்கு தெரியாத எதிரி.. கொரோனாவிற்கு பின் உலகம் வேறு மாதிரி இருக்கும்.. பிரதமர் மோடி பேச்சு!
பெங்களூர்: கொரோனாவிற்கு பின் உலகம் வேறு மாதிரி இருக்கும், அந்த வைரஸ் ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரி என்று பிரதமர் மோடி பேசி உள்ளார்.
பெங்களூர் ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து பெங்களூர் ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலை.யில் பிரதமர் மோடி ஆன்லைன் வீடியோ மூலம் உரையாற்றினார்.

கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் வேளையில் பிரதமர் மோடி பல்வேறு விஷயங்களை தனது உரையில் குறிப்பிட்டார். அதில், கொரோனா வைரஸ் என்பது நமது கண்ணுக்கு தெரியாத எதிரி. நாம் இதற்கு எதிராக தீவிரமாக சண்டையிட்டு வருகிறோம்.
கொரோனாவுக்கு எதிரான போரில் நமது மருத்துவர்கள் உள்ளிட்ட வீரர்கள் வெற்றி பெறுவர்.உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஆயுஷ்மான் பாரத். இதன் மூலம் இந்தியர்கள் பெரிய அளவில் பலன் அடைந்து இருக்கிறார்கள்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 2 ஆண்டுகளில் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.கிராமப்புற பெண்கள்தான் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் மிகப் பெரிய அளவில் பயனடைந்துள்ளனர். கொரோனா போன்ற வைரஸ் பரவி வரும் வேளையில் இது போன்ற திட்டங்கள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸை கர்நாடகா அரசு எதிர்கொண்டவிதம் பாராட்டுக்குரியது. கொரோனாவை கர்நாடகா மாநில அரசும், மருத்துவர்களும் மிக சிறப்பாக எதிர்கொண்டு இருக்கிறார்கள். நாம் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரை விட மிக மோசமான ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம். கொரோனாவிற்கு பின் உலகம் வேறு மாதிரி இருக்கும்.

கொரோனா வலுவானதாக இருக்கலாம். ஆனால் நமது மருத்துவர்கள் அதை விட வலுவானவர்கள் . அவர்கள் கொரோனாவிற்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறார்கள். கண்ணுக்கு தெரியாத வைரசுக்கு எதிரான வலிமையான மருத்துவர்களின் போராட்டம் இது. நாம் இனி வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ துறை, ஆரம்ப சுகாதாரம், மருத்துவ பொருட்கள் உற்பத்தி என்று பல விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
மருத்துவ பணியாளர்களை அதிகரிக்கும் வகையில் விரைவில் சட்டம் கொண்டு வரப்படும்.மருத்துவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். முன்னிலை பணியாளர்களை காக்க வேண்டியது நமது கடமை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications