ஏ ஏ பட்டிக்காட்டான், கிராமத்தான்".. புருஷனை இப்படித்தான் கூப்பிடுவாராம் "பியூட்டி".. கடைசியில இப்படி?
பெங்களூர்: நிறம், உருவத்தை வைத்து, ஒருவரை எடைபோடுவதும், வெளிப்புற தோற்றத்தை வைத்து மட்டமாக நினைப்பதும், தொடர்கதையாகிவிட்டது.. குடும்ப உறவுகளிடமும் இந்த பேதம் தலைதூக்கி வருவதுடன், உயிரையும் சேர்த்து குடித்துவருகிறது.
இந்த "நிறவெறி" காலம் காலமாக, வல்லரசு நாடுகளில்தான் தலைதூக்கி அப்பாவி உயிர்களை பலிகடா ஆக்கி வருகிறது என்றால், நம்ம நாட்டிலும் ஆக்கிரமித்து கொண்டிருப்பது தொடர்ந்து வேதனையை தந்து வருகிறது.

கடந்த மாதம்கூட, அப்பாவி பெண் ஒருவர் கேரளாவில் கொலையே செய்யப்பட்டுவிட்டார்.. அப்துல், என்பவரது 2வது மனைவி ஷஜீரா.. இவர் சற்று கலர் குறைவாக இருப்பாராம்.. மனைவி கருப்பாக இருப்பது ஷிகாப்புக்கு பிடிக்காததால், மனைவியின் நிறத்தை சொல்லி அடிக்கடி அவரை கிண்டல் செய்தும், கொடுமைப்படுத்தியும் வந்திருக்கிறார். செல்போனைக் கூட தொடக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறார்.
கொடுமை முடிவு: மீன் பிடித்து வரலாம் என்று, ஆற்றங்கரைக்கு சென்று, அந்த ஆற்றிலேயே மூழ்கடித்து கொன்றும்விட்டார் கணவர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இவரை கைது செய்தாலும், தோற்றத்தை வைத்து இளக்காரமாக ஒருவரை நடத்தும்போக்கு தொடர்ந்தே வருகிறது. இதோ கர்நாடகாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்திலுள்ளது, குந்தூரி பாளையா என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் மஞ்சுநாத்.. 38 வயதாகிறது.. மெட்ரோவில் என்ஜினியராக வேலை பார்த்து வருபவர்.. இவரது மனைவி பெயர் பிரியங்கா.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 10 வருடங்களாகிவிட்டது.. ஒரு குழந்தையும் உள்ளது.
சடலம்: இந்நிலையில், மஞ்சுநாத் திடீரென தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... தகவலறிந்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்த மஞ்சுநாத் உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். அப்போதுதான், மஞ்சுநாத் தற்கொலைக்கு காரணம் அவரது மனைவி பிரியங்கா என்பது தெரியவந்தது.
கல்யாணம் ஆன நாளிலிருந்தே, கணவனை, மட்டமாக நடத்தி வந்துள்ளார் பிரியங்கா.. கிராமத்தான் கிராமத்தான் என்று கிண்டல் கேலி செய்து கொண்டேயிருப்பாராம்.. அதுமட்டும் இல்லாமல், சேர்ந்து வாழ பிடிக்கவேயில்லை என்றும் கணவரிடமே வெளிப்படையாகவே சொல்லி கொண்டேயிருப்பாராம். இதனால், ஆரம்பத்தில் இருந்தே மனஉளைச்சலில் மஞ்சுநாத் இருந்துள்ளார்..
பிரியங்கா காரணம்: நாளுக்கு நாள் பிரியங்காவின் விமர்சனம் அதிகமாகிவிட்டதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் மஞ்சுநாத்.. மனைவி தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதாக, தன்னுடைய சகோதரருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, அதற்கு பிறகுதான் தூக்கிட்டு தற்கொலையே செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மஞ்சுநாத்தின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பிரியங்கா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமத்தான் என்று மனைவி, விமர்சித்து பேசி மனசை நோகடித்ததால், மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலையே செய்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications