Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏ ஏ பட்டிக்காட்டான், கிராமத்தான்".. புருஷனை இப்படித்தான் கூப்பிடுவாராம் "பியூட்டி".. கடைசியில இப்படி?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நிறம், உருவத்தை வைத்து, ஒருவரை எடைபோடுவதும், வெளிப்புற தோற்றத்தை வைத்து மட்டமாக நினைப்பதும், தொடர்கதையாகிவிட்டது.. குடும்ப உறவுகளிடமும் இந்த பேதம் தலைதூக்கி வருவதுடன், உயிரையும் சேர்த்து குடித்துவருகிறது.

இந்த "நிறவெறி" காலம் காலமாக, வல்லரசு நாடுகளில்தான் தலைதூக்கி அப்பாவி உயிர்களை பலிகடா ஆக்கி வருகிறது என்றால், நம்ம நாட்டிலும் ஆக்கிரமித்து கொண்டிருப்பது தொடர்ந்து வேதனையை தந்து வருகிறது.

Did the wife tease her Husband and why did Bangalore Engineer husband take this sudden decision

கடந்த மாதம்கூட, அப்பாவி பெண் ஒருவர் கேரளாவில் கொலையே செய்யப்பட்டுவிட்டார்.. அப்துல், என்பவரது 2வது மனைவி ஷஜீரா.. இவர் சற்று கலர் குறைவாக இருப்பாராம்.. மனைவி கருப்பாக இருப்பது ஷிகாப்புக்கு பிடிக்காததால், மனைவியின் நிறத்தை சொல்லி அடிக்கடி அவரை கிண்டல் செய்தும், கொடுமைப்படுத்தியும் வந்திருக்கிறார். செல்போனைக் கூட தொடக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறார்.

கொடுமை முடிவு: மீன் பிடித்து வரலாம் என்று, ஆற்றங்கரைக்கு சென்று, அந்த ஆற்றிலேயே மூழ்கடித்து கொன்றும்விட்டார் கணவர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இவரை கைது செய்தாலும், தோற்றத்தை வைத்து இளக்காரமாக ஒருவரை நடத்தும்போக்கு தொடர்ந்தே வருகிறது. இதோ கர்நாடகாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்திலுள்ளது, குந்தூரி பாளையா என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் மஞ்சுநாத்.. 38 வயதாகிறது.. மெட்ரோவில் என்ஜினியராக வேலை பார்த்து வருபவர்.. இவரது மனைவி பெயர் பிரியங்கா.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 10 வருடங்களாகிவிட்டது.. ஒரு குழந்தையும் உள்ளது.

சடலம்: இந்நிலையில், மஞ்சுநாத் திடீரென தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... தகவலறிந்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்த மஞ்சுநாத் உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். அப்போதுதான், மஞ்சுநாத் தற்கொலைக்கு காரணம் அவரது மனைவி பிரியங்கா என்பது தெரியவந்தது.

கல்யாணம் ஆன நாளிலிருந்தே, கணவனை, மட்டமாக நடத்தி வந்துள்ளார் பிரியங்கா.. கிராமத்தான் கிராமத்தான் என்று கிண்டல் கேலி செய்து கொண்டேயிருப்பாராம்.. அதுமட்டும் இல்லாமல், சேர்ந்து வாழ பிடிக்கவேயில்லை என்றும் கணவரிடமே வெளிப்படையாகவே சொல்லி கொண்டேயிருப்பாராம். இதனால், ஆரம்பத்தில் இருந்தே மனஉளைச்சலில் மஞ்சுநாத் இருந்துள்ளார்..

பிரியங்கா காரணம்: நாளுக்கு நாள் பிரியங்காவின் விமர்சனம் அதிகமாகிவிட்டதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் மஞ்சுநாத்.. மனைவி தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதாக, தன்னுடைய சகோதரருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, அதற்கு பிறகுதான் தூக்கிட்டு தற்கொலையே செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மஞ்சுநாத்தின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பிரியங்கா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமத்தான் என்று மனைவி, விமர்சித்து பேசி மனசை நோகடித்ததால், மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலையே செய்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+