Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'காந்தாரா வேடம்' ஆவேசமாக நடனம் ஆடும்போதே..சரிந்து விழுந்த கலைஞர்..நடிப்பு என நினைத்த மக்கள்..சோகம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் காந்தாரா வேடம் அணிந்து ஆவேசமாக ஆடிய கலைஞர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். தெய்வீக நிகழ்ச்சியை கண்டு கொண்டு இருந்த மக்கள், காந்தாரா படத்தில் போன்றே இருப்பதால் நடிப்பு என முதலில் நினைத்தனர். ஆனால், சில நிமிடங்கள் ஆகியும் அவர் எழுந்து இருக்கவில்லை. அதன்பிறகே அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்தது.

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய 'காந்தாரா' திரைப்படம் கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் வரவேற்பு காரணமாக பான் இந்தியா முறையில் மற்ற மொழிகளிலும் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

காந்தாரா திரைப்படம்

காந்தாரா திரைப்படம்

காந்தாரா திரைப்படத்தில் துளு நாடு அதாவது மங்களூர், உடுப்பி போன்ற தெற்கு கர்நாடக கடலோர பகுதிகளில் வழிபடக்கூடிய கிராமப்புற தெய்வ வழிபாடு காட்டப்பட்டு இருக்கும். இந்த படத்தில் அமைக்கப்பட்டு இருந்த காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்து இருந்தன. குறிப்பாக இந்த படத்தில் 'பூதகோலா' படம் பார்த்த ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாக பதியும் வகையில் இருந்தது.

மாரடைப்பால் உயிரிழப்பு

மாரடைப்பால் உயிரிழப்பு

கர்நாடக மாநிலத்தில் பூதாகோலா போன்று யக்சகாணா எனப்படும் தெய்வீக கலைநிகழ்ச்சியும் நடைபெறுவதும் வழக்கம். அதுபோன்று ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது அந்த நிகழ்வில் தெய்வ வேடம் அணிந்து நடித்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான விவரம் வருமாறு:- தட்சினகன்னடா மாவட்டம் கடப்பா தாலுகா எடமங்கலா அருகே உள்ள இட்யகா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காந்து அஜிலாமூலங்கிரி.

 ஆவேசமாக நடனமாடினார்

ஆவேசமாக நடனமாடினார்

இவர் அந்த பகுதிகளில் தெய்வீக கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தி பரவசத்தில் அருள் வாக்கு சொல்லுவார் என்று சொல்லப்படுகிறது. மற்றும் பக்தர்களுக்கு ஆசியும் வழங்குவார். இந்த யக்சகாணா தெய்வீக நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு அஜிலாமூலங்கிரி நடனமாடிக் கொண்டு இருந்தார். பக்தி பரவசத்தில் ஆவேசமாக நடனமாடிக் கொண்டு இருந்தார். அப்போது, திடீரென நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார்.

நடிப்பு என நினைத்த மக்கள்

நடிப்பு என நினைத்த மக்கள்

தெய்வீக நிகழ்ச்சியை கண்டு கொண்டு இருந்த மக்கள், காந்தாரா படத்தில் போன்றே இருப்பதால் நடிப்பு என முதலில் நினைத்தனர். ஆனால், சில நிமிடங்கள் ஆகியும் அவர் எழுந்து இருக்கவில்லை. அதன்பிறகே ஓடிச்சென்று பார்த்தனர். சுயநினைவின்றி கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே மாரடைப்பால் காலமாகிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தெய்வீக கலைநிகழ்ச்சியின் போது அந்த தெய்வீக கலை நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்டவரே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+