கர்நாடகா முதலமைச்சர் பதவி ஒப்பந்தம் – முதல்முறையாக மனம் திறந்த டி.கே. சிவக்குமார்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் நவம்பர் புரட்சி உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் பதவிக்காக சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே அதிகார போட்டி நிலவி கொண்டிருக்கிறது. முதலமைச்சர் பதவிக்காக இருவரும் பல்வேறு அஸ்திரங்களை கையில் எடுத்து வருகிறார்கள். ஆனால் பொதுவெளியில் அதை வெளிப்படுத்தாமல் இருந்தனர். இந்நிலையில் முதல்முறையாக முதலமைச்சர் பதவிக்கு நடைபெற்ற ஒப்பந்தம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அந்த வெற்றியை கொண்டாடுவதற்குள் அங்கு முதலமைச்சர் பதவியை யார் பிடிப்பது என்று சித்தராமையா, டி.கேசிவக்குமார் இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட கூடாது என்று யோசித்த காங்கிரஸ் தலைமை இதற்காக ஒரு ஒப்பந்தம் போட்டது.

கர்நாடகா முதலமைச்சர் பதவி
அதன்படி 5 வருட காங்கிரஸ் ஆட்சியில் முதல் 2.5 வருடங்கள் சித்தராமையாவும், அடுத்த 2.5 வருடங்கள் டி.கே சிவக்குமார் முதலமைச்சர் பதவியில் இருப்பார்கள் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே. சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் 2025 நவம்பர் மாதத்துடன் காங்கிரஸ் ஆட்சியின் முதல் 2.5 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது.
இதன் காரணமாக கர்நாடக அரசியலில் நவம்பர் புரட்சி வெடிக்க போகிறது, அரசியலில் பெரிய மாற்றம் இருக்க போகிறது என்று வெளியாகும் தகவல்களால் கடந்த சில வாரங்களாக கர்நாடகா அரசியல் உச்சகட்ட பரபரப்பில் நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவியை தக்க வைப்பதற்காக சித்தராமையாவும், முதலமைச்சர் பதவியை பிடிப்பதற்காக டி.கே சிவக்குமாரும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.
உச்சகட்ட பரபரப்பு
டி.கே. சிவக்குமார் தன் ஆதரவு எம்எல்ஏக்களிடம் கையெழுத்து வாங்குவது, டெல்லி சென்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வை சந்தித்து சிவக்குமாரை முதலமைச்சராக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த செயல்களால் கோபமடைந்த சித்தராமையா, நவம்பர் புரட்சி எல்லாம் ஒன்றுமில்லை. இது ஊடகங்கள் கட்டமைத்த கட்டுக்கதை என்றார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த சித்தராமையா, தன்னை முதலமைச்சராக தொடர அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தப் பிரச்சனையில் எங்கள் கட்சி உயர்மட்ட குழு தான் முடிவு செய்யும் என்று கார்கே நழுவிட்டார். விரைவில் சித்தராமையா, டி.கே சிவக்குமாரை அழைத்து தனித்தனியாக ஆலோசனை நடத்தி இதில் முடிவு எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கர்நாடகா காங்கிரஸ் முதலமைச்சர் ரேஸில் மக்கள் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை என இதைக் கண்டித்து கர்நாடகா பாஜக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
உடைத்த டி.கே சிவக்குமார்
இத்தனை நாட்களாக சித்தராமையாவை எதிர்க்கவில்லை. கட்சி நலன் தான் முக்கியம் என்று கூறி வந்த டி.கே சிவக்குமார் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'முதலமைச்சர் விவகாரம் குறித்து பொதுவெளியில் விவாதிக்க உடன்பாடு இல்லை. 2023 ஆம் ஆண்டு எங்களில் ஒரு சிலருக்குள் மட்டுமே இந்த ஒப்பந்தம் நடந்துள்ளது. அதைப்பற்றி வெளியில் யாருக்கும் தெரியாது.
நான் எனது மனசாட்சியை நம்பி செயல்படுபவன். எந்த காரணத்திற்காகவும் கட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை. கட்சி என்ன சொல்கிறதோ அதன்படி ஒற்றுமையாக செயல்படுவோம். 2028 கர்நாடகா சட்டமன்ற தேர்தல், 2029 நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியம். அதில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்." என்றார். அவரின் இந்த கருத்து கர்நாடகா அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications