Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லா ஆண்களையும் ஜெயில்ல போடலாமா? தெருநாய் வழக்கில் உச்சநீதிமன்ற கருத்தால் நடிகை ரம்யா அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சமீபத்தில் தெருநாய்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாய்களால் சாலைகளில் ஆபத்து ஏற்படுகிறது என்று கூறியது. இந்த கருத்தில் அதிருப்தியான நடிகை ரம்யா என்ற திவ்ய ஸ்பந்தனா ஒரு ஆண் எப்போது பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் ஈடுபடுவான் என்பது தெரியாது. இதனால் அனைத்து ஆண்களையும் சிறையில் அடைக்கலாமா? என்று பதிவிட்டு இருப்பது விவாதமாகி உள்ளது.

தமிழில் சிலம்பரசனின் குத்து, தனுஷின் பொல்லாதவன் சூர்யாவின் வாரணம் ஆயிரம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா என்ற திவ்ய ஸ்பந்தனா.

இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியாக இருந்தவர். தற்போது அரசியலில் இருந்து சற்று விலகி மீண்டும் திரைப்படத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின்போது தெருநாய்களை கட்டுப்படுத்த தவறும் மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது.

உச்சநீதிமன்ற விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‛‛தெருக்களில் நாய்கள், விலங்குகள் இருக்கக் கூடாது. எந்த நாய் காலையில் எந்த மனநிலையில் இருக்கும் என்று யாருக்குத் தெரியும்?. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் தெருநாய்களை பொதுஇடங்களில் இருந்து அப்புறப்படுத்துவது, கருத்தடை செய்வது, தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட விஷயங்களை முறையாக மாநில அரசுகள் செய்ய வேண்டும். இதை செய்யாத அரசுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியது. மேலும் ராஜஸ்தானில் சாலைகளில் நடமாடிய தெருநாயால் நீதிபதிகள் காயமடைந்த விபத்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற கருத்தால் நடிகை ரம்யா அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ந்நிலையில் தான் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‛‛ஒரு ஆண் எப்போது பாலியல் குற்றம் செய்வான் என்பது தெரியாத நிலையில் அனைத்து ஆணை்களையும் சிறையில் அடைக்கலாமா?'' என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது விவாதமாகி உள்ளது.

நம் நாட்டில் தெருநாய்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விசாரணையின்போதும் நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களிலிருந்து தெருநாய்களை அகற்றி, குறிப்பிட்ட முகாம்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+