எல்லா ஆண்களையும் ஜெயில்ல போடலாமா? தெருநாய் வழக்கில் உச்சநீதிமன்ற கருத்தால் நடிகை ரம்யா அதிருப்தி
பெங்களூர்: சமீபத்தில் தெருநாய்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாய்களால் சாலைகளில் ஆபத்து ஏற்படுகிறது என்று கூறியது. இந்த கருத்தில் அதிருப்தியான நடிகை ரம்யா என்ற திவ்ய ஸ்பந்தனா ஒரு ஆண் எப்போது பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் ஈடுபடுவான் என்பது தெரியாது. இதனால் அனைத்து ஆண்களையும் சிறையில் அடைக்கலாமா? என்று பதிவிட்டு இருப்பது விவாதமாகி உள்ளது.
தமிழில் சிலம்பரசனின் குத்து, தனுஷின் பொல்லாதவன் சூர்யாவின் வாரணம் ஆயிரம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா என்ற திவ்ய ஸ்பந்தனா.

இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியாக இருந்தவர். தற்போது அரசியலில் இருந்து சற்று விலகி மீண்டும் திரைப்படத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தான் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின்போது தெருநாய்களை கட்டுப்படுத்த தவறும் மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது.
உச்சநீதிமன்ற விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‛‛தெருக்களில் நாய்கள், விலங்குகள் இருக்கக் கூடாது. எந்த நாய் காலையில் எந்த மனநிலையில் இருக்கும் என்று யாருக்குத் தெரியும்?. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் தெருநாய்களை பொதுஇடங்களில் இருந்து அப்புறப்படுத்துவது, கருத்தடை செய்வது, தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட விஷயங்களை முறையாக மாநில அரசுகள் செய்ய வேண்டும். இதை செய்யாத அரசுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியது. மேலும் ராஜஸ்தானில் சாலைகளில் நடமாடிய தெருநாயால் நீதிபதிகள் காயமடைந்த விபத்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற கருத்தால் நடிகை ரம்யா அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ந்நிலையில் தான் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‛‛ஒரு ஆண் எப்போது பாலியல் குற்றம் செய்வான் என்பது தெரியாத நிலையில் அனைத்து ஆணை்களையும் சிறையில் அடைக்கலாமா?'' என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது விவாதமாகி உள்ளது.
நம் நாட்டில் தெருநாய்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விசாரணையின்போதும் நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களிலிருந்து தெருநாய்களை அகற்றி, குறிப்பிட்ட முகாம்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications