சொத்துகளை விற்க E - Khata கட்டாயம்.. செப்டம்பர் 30ம் தேதி முதல் அமல்.. வெளியான முக்கிய தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் வரும் 30ம் தேதி முதல் சொத்து பதிவு செய்வதற்க இ-கட்டா (E Khata)என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தவிர்க்க இந்த புதிய நடைமுறை மாநிலம் முழுவதும் வரும் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று கர்நாடகா வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். இவரது அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக கிருஷ்ணபைரே கவுடா செயல்பட்டு வருகிறார்.

கர்நாடகாவை பொறுத்தவரை பல இடங்களில் பத்திரப்பதிவு தொடர்பான மோசடி, முறைகேடுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் வெளியூரில் வசிப்பதால் சிலர் முறைகேடு செய்து நிலத்தை அபகரித்து விடுகின்றனர்.
அதாவது நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாமலே இன்னொருவருக்கு நிலங்கள் பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது கர்நாடகாவில் சொத்துகளை பதிவு செய்ய இ- கட்டா (E Khata) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா கூறியதாவது: கர்நாடகாவில் சொத்துகளை பதிவு செய்ய இ-கட்டா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை என்பது செப்டம்பர் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சொத்து பதிவு செய்யும்போது நடக்கும் மோசடி, முறைகேடுகளை தடுக்க இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை என்பது சோதனை அடிப்படையில் சில மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சித்ரதுர்கா, ராய்ச்சூர், பாகல்கோட்டை, சாமராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பத்திரப்பதிவுக்கு இ-கட்டா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் கிராமங்கள் என்றால் E - Swathu மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நகரங்கள் என்றால் E-Aasthi மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் வரும் 30ம் தேதி முதல் பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் E-khatas கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் சொத்துகளை விற்பனை செய்வோர் மற்றும் வாங்குவோர் இ-கட்டா கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். E Swathu, E Aasthi என இரண்டும் மாநில பதிவுத்துறை செயல்முறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி E Khata இன்று எந்த சொத்துகளும் பதிவு செய்ய முடியாது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications