டெல்லி வீரர்களின் திருடுபோன பேட்கள் மீட்பு! சிக்கிய 2 பேர்! ஆனாலும் வருத்தத்தில் வார்னர்! அச்சச்சோ
பெங்களூர்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் உள்பட பல வீரர்களின் பேட் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை திருடிய 2 பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இவர்களிடம் இருந்து ஏராளமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முக்கிய அப்டேட்டை வழங்கி உள்ளார். கைதானவர்களிடம் இருந்து பேட் உள்ளிட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டாலும் கூட வார்னர் வருத்தம் ஒன்றையும் திடீரென தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஐபிஎல் 16வது சீசன் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பல்வேறு முக்கிய நகரங்களில் தினமும் போட்டிகள் நடந்து வருகின்றன. சாம்பியன் பட்டத்தை வெல்ல மொத்தம் 10 அணிகள் முட்டி மோதுகின்றன. கடந்த மார்ச் 31ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான் கடந்த 15ம் தேதி பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்(ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்(டிசி) அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து டெல்லி அணி வீரர்கள் பெங்களூரில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டனர். டெல்லி விமானத்தில் அவர்கள் இறங்கியபோது தான் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது டெல்லி அணி வீரர்களின் பேட், தொடை பேட்கள், க்ளோவ்ஸ் உள்பட பல்வேறு உபகரணங்கள் என பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வார்னர் தனது வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் 16 பேட்டுகள், பேட், ஷூக்கள், தொடை பேடுகள், க்ளோவ்ஸ், கிட்பேக்குகள் திருடப்பட்டுள்ளன. எனக்கு சொந்தமான 2 பேட்டுகள், மிட்செல் மார்ஸ், பில் சால்ட்டுக்கு சொந்தமான தலா 3 பேட்டுகள், யஷ் துல்லுக்கு சொந்தமான 6 பேட்டுகள் திருட்டு போனது என குறிப்பிட்டு இருந்தார். மேலும் இதுபற்றி டெல்லி அணி நிர்வாகம் சார்பில் பெங்களூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது 2 பேரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். போலீசாரிடம் சிக்கியவர்களிடம் இருந்து பேட் உள்பட பல்வேறு பொருட்களை போலீசார் மீட்டனர். இதுபற்றியும் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது கைதானவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பேட் உள்ளிட்ட உபகரணங்களின் படத்தை வெளியிட்ட டேவிட் வார்னர், ‛‛போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டனர். இன்னும் சில பேட்டுகள் மிஸ்ஸிங்காக உள்ளது. இருப்பினும் நன்றி'' என தெரிவித்துள்ளார். அதாவது புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பெரும்பாலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்த டேவிட் வார்னர், தான் இன்னும் சில பேட்கள் மிஸ்ஸாகி இருப்பதாக தெரிவித்து வருத்தத்தையும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications