பெங்களூரு டூ தென்காசி! பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. ரயில்வே டிக்கெட் புக்கிங் எப்போ தெரியுமா
பெங்களூரு: பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து தென்காசிக்கு மே 24ம் தேதி, புதிய சிறப்பு ரயில் ஒன்றை தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் தென்தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் நோக்கிலும், பயணத்தை எளிதாக்கும் வகையிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதை பற்றின விவரத்தை இங்கு பார்ப்போம்.
இந்த சிறப்பு ரயில் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை, மே 24, 2026 அன்று இரவு 10:20 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்குகிறது.

சுமார் 601 கிலோமீட்டர் தொலைவைக் கடக்கும் இந்த ரயில், மறுநாள் திங்கட்கிழமை, மே 25, 2026 அன்று மதியம் 01:00 மணிக்கு தென்காசி சந்திப்பை வந்தடையும் வகையில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து வரும் 25-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06514) மறுநாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.
பெங்களூரு டூ தென்காசி
அதாவது ஒட்டுமொத்தமாக 14 மணி நேரம் 40 நிமிடங்கள் பயண நேரத்தைக் கொண்ட இந்த ரயில், ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் வழியாகச் சென்று தென்காசியைச் சென்றடையும்.
இந்த ரயிலானது பயணிகளின் வசதிக்காக சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளது. பழைய ஐ.சி.எஃப் (ICF) பெட்டிகளைக் கொண்டு இயக்கப்பட உள்ள இந்த ரயிலில், பயணிகள் தங்களுக்கு தேவையான படுக்கை மற்றும் இதர வசதிகளை ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (22-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
ரிசர்வேஷன் ஆரம்பம்
பெங்களூருவில் இருந்து தென்காசிக்கு நேரடியாகச் செல்ல விரும்பும் பயணிகளுக்கு இந்த ரயில் ஒரு மிகச்சிறந்த மற்றும் பாதுகாப்பான வாய்ப்பாக அமையும். குறிப்பாக, வார இறுதி நாட்களிலும், விடுமுறை காலங்களிலும் சொந்த ஊர்களுக்குச் செல்லத் துடிக்கும் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.
தற்போது பெங்களூருவில் இருந்து தென்காசி செல்வதற்கு ஏற்கனவே உள்ள ரயில்களில் கடும் கூட்ட நெரிசல் நிலவுவதால், பயணிகளின் இந்த சிரமத்தைப் போக்கும் விதமாகவே ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதுமட்டுமல்ல, இந்த ரயிலின் வருகை மற்றும் புறப்பாடு குறித்த நேரங்கள் ஏதேனும் மாற்றப்பட்டால், அது குறித்து அவ்வப்போது ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் சரிபார்த்துக்கொள்வது பயணிகளுக்குச் சிறப்பாக இருக்கும்.
தென்காசி - புக்கிங் ஆரம்பம்
இந்த புதிய சேவை மூலம் பெங்களூருவில் இருந்து தென்காசி நோக்கிய தங்களது பயணத்தைப் பயணிகள் இனி எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் திட்டமிட்டு மேற்கொள்ள முடியும். இத்தகு ரயில் சேவைகள் மூலம் பயணிகளின் நேரம் மிச்சப்படுவதோடு, சாலைப் போக்குவரத்தின் நெரிசலும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வேயின் இந்த புதிய முயற்சிக்குத் தென்தமிழக மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் இந்த ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications