Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவே வேண்டாம்.. நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்த பெங்களூர் தொழிலதிபர்! வரி பிரச்சனையால் விபரீத முடிவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியாவில் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி கட்டமைப்பு சரியாக இல்லை. இதனால் ‛பெண்டிங்'கில் உள்ள ரூ.4 கோடி வரியை செலுத்திவிட்டு பெங்களூரை விட்டு வெளியேறி வெளிநாட்டுக்கு செல்ல உள்ளதாக தொழிலதிபர் ரோஹித் ஷ்ராஃப் அறிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார். அவர் யார்? இந்தியாவை விட்டு வெளியேற அவர் எடுத்த முடிவின் பின்னணி பற்றிய முக்கிய விஷயங்கள் வருமாறு:

பெங்களூரில் தொழிலதிபராக இருப்பவர் ரோஹித் ஷ்ராஃப். இவர் இவர் Aflog Group நிறுவனத்தின் பார்ட்டனராகவும், தலைமை பொறுப்பிலும் உள்ளார். இது மார்க்கெட்டிங் நிறுவனமாகும்.

gst-and-income-tax-row-i-am-decided-to-leave-india-after-paying-rs-4-cr-in-taxes-says-bengaluru-en

இந்நிலையில் தான் ரோஹித் ஷ்ராஃப் இந்தியாவை விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி மற்றும் வருமான வரி அதிகமாக உள்ளது என்பது தான்.

இதுதொடர்பாக ரோஹித் ஷ்ராஃ ப் தனது லிங்க்இன் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் வரி மற்றும் அதற்கான கட்டமைப்பு விவகாரத்தில் பல குறைபாடுகள் உள்ளது. வணிகத்துக்கான சூழல், வரி செலுத்துவோருக்கான அங்கீகாரம் சரியா இல்லை. கடந்த 12 முதல் 18 மாதங்களில் மட்டும் வணிக ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி என மொத்தம் ரூ.4 கோடியை செலுத்தி உள்ளேன்.

முழுமையாக இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டும் கூட தொடர்ந்து பல விளக்கங்கள், தணிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
இந்திய மக்கள்தொகையில் 4-5 சதவீத மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர். ஆனாலும் இந்த மக்கள் தொடர்ந்து புதிய அறிவிப்புகள் வழியாக குறிவைக்கப்படுகின்றனர். இதனால் நெருக்கடி ஏற்படுகிறது.

ஜிஎஸ்டி முதல் வருமான வரி வரை பல விஷயங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்த வரிகளை செலுத்தினாலும் கூட எந்த அங்கீகாரம் மற்றும் பலனும் கிடைப்பது இல்லை. மாறாக செலவு தான் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக ஜிஎஸ்டி, டிடிஎஸ் மற்றும் வருமான வரி உள்ளிட்டவற்றை சமாளிக்கவே தனியாக ஆட்களை நியமித்து பணியமர்த்த வேண்டி உள்ளது.

இந்த பிரச்சனையை எதிர்த்து போராடுவதை விட பணம் செலுத்தி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு பலரும் அடுத்த வேலைக்கு செல்கின்றனர். இப்படி வரி செலுத்தும் பலரும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் அற்றவர்களால் உள்ளதால் எளிதில் புறக்கணிக்கப்படுகிறார்கள் அல்லது சுரண்டப்படுகிறார்கள்.

இந்தியர்கள் பலரும் வெளிநாடுகளில் வணிகம் செய்கின்றனர். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது நாட்டை வெறுத்து செல்வது என்று பொருள் கொள்ளக்கூடாது. இப்போது சுய பாதுகாப்பே தேசபக்தி கோஷங்களை விட முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் 2026ம் ஆண்டுக்குள் இந்தியாவை விட்டே வெளியேறுகிறேன்'' என கூறியுள்ளார். இந்த பதிவை பார்க்கும் பலரும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை மற்றும் நண்பர்களின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி வருகின்றன. இன்னும் சிலர் அவருக்கு ஆறுதல் அளித்து வுருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+