எல்லாத்துக்கும் காரணம் இந்த மீடியாக்கள்தான்.. இனி.. பகீர் முடிவை எடுத்த எச் டி குமாரசாமி
பெங்களூர்: இனி மேல் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க போவதில்லை என்று திடீர் முடிவை கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி எடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் கரும்பு விவசாயிகள் சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தக் கோரியும் நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் கர்நாடக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் இந்த போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இதனிடையே விவசாய சங்கத் தலைவர் ஜெயஸ்ரீ குரன்னவர் பற்றி முதல்வர் குமாரசாமி பேசியதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து குமாரசாமி கூறுகையில் தன் பேச்சை ஊடகங்கள் திரித்து விடுகின்றனர். எனது எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமான ஊடகங்களுக்கு இனி பேட்டி கொடுக்கப் போவதில்லை என அறிவித்திருந்தார்.
அவர் மேலும் கூறுகையில் ஊடகங்களின் செயல்பாட்டால் நான் வருத்தத்தில் உள்ளேன். என்னை பற்றி அநியாயமான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. குறிப்பிட்ட ஊடகங்கள் எனக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன.
சிறிய விஷயத்தைக் கூட பூதாகரமாக்கி விடுகிறார்கள். எனவே இனி மேல் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்கவே போவதில்லை. உங்களுக்கு வேண்டுமென்றால் செய்தியை வெளியிடலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். அது பற்றி எனக்கு கவலை கிடையாது என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications