“துபாய் ஏர் ஷோவில் நடந்த தேஜஸ் விமான விபத்து.. தனிப்பட்ட நிகழ்வு!” - HAL நிறுவனம் விளக்கம்
பெங்களூர்: கடந்த 21ம் தேதி துபாயின் அல் மக்தூம் சர்வதேச விமான தளத்தில் நடந்த ஏர் ஷோவில் தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார். இந்நிலையில் இந்த விபத்து குறித்து விமானத்தை தயாரித்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், "துபாயில் நடந்த தேஜாஸ் விமான விபத்து ஒரு தனிப்பட்ட நிகழ்வு. இந்த சம்பவத்தால் நிறுவனத்தின் வணிக செயல்பாடுகள், நிதி செயல்திறன் அல்லது அதன் எதிர்கால விநியோகங்களில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய, விசாரணை நடத்தும் அமைப்புகளுக்கு நிறுவனம் அதன் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது. விபத்து தொடர்பான விசாரணையில் வெளியாகும் முன்னேற்றம் குறித்து அறிவிக்கப்படும். விபத்துக்கான காரணத்தை கண்டறிய இந்திய விமானப்படை விசாரணை குழுவை அமைத்து இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நிறுவனம் கூறியிருந்தாலும், இன்று காலை தொடங்கி, இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3 சதவீதம் அளவுக்கு குறைந்து வர்த்தகமாகி வருகின்றன.
தேஜஸ் விமானம் ஏறத்தாழ கடந்த 10 ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் ஒரே ஒருமுறை மட்டுமே விபத்தில் சிக்கியது. அதிலும் விமானி நல்வாய்ப்பாக உயிர் தப்பி இருந்தார். அந்த அளவுக்கு நம்பிக்கை பெற்ற இந்த விமானம், திடீரென விழுந்து நொறுங்கி இருப்பது பல்வேறு தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விமானியின் மறைவுக்கு ரஷ்ய விமானப்படை, தனது போர் விமானங்களை இயக்கி இறுதி மரியாதை செலுத்தியது. அதேபோல அமெரிக்க விமானப்படையின் ஒரு பிரிவு, துபாய் ஏர் ஷோவில் நாங்கள் விமானத்தை இயக்க மாட்டோம் என்று கூறி விங் கமாண்டர் மறைவுக்கு தனது மரியாதையை செலுத்தியுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications