ஹிஜாப்.. உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியில்லை.. உச்சநீதிமன்றத்தில் நீதி வெல்லும்: மனுதாரர்களின் வக்கீல்
பெங்களூர்: ‛‛ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமில் பின்பற்றும் நடைமுறைகளில் இன்றியமையாததாகும். ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மோசமானது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். அங்கு நீதி வெல்லும் என்று நம்புகிறோம்'' என மனுதாரர்களின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஎம் தார் கூறினார்.
Recommended Video
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் முதன் முதலாக ஹிஜாப் பிரச்சனை உருவானது. ஹிஜாப்புக்கு, ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் மாணவர்கள் போராட தொடங்கினர்.
சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும் கல்லூரிகளில் சீருடை முறையை பின்பற்ற கர்நாடக அரசும் உத்தரவிட்டது.

வழக்கு
இந்நிலையில் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி மாவட்ட மாணவிகள் தனித்தனியே கர்நடாக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுக்கள் மீது நீதிபதி கிருஷ்ண தீட்சித் விசாரித்தார். அதன்பிறகு வழக்கு மூவர் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.

தடை செல்லும்
ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும் ஹிஜாப்புக்கு அனுமதி கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தீர்ப்பு குறித்து அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், ‛‛கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் தடையை உறுதி செய்கிறது. தனிநபர் விருப்பத்தை விட கல்வி நிறுவனங்களில் ஒழுக்கத்தை மேலோங்க செய்துள்ளது'' என்றார்.

மோசமான தீர்ப்பு
இந்த தீர்ப்பு குறித்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஎம் தார் கூறுகையில், ‛‛ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமில் பின்பற்றும் நடைமுறைகளில் இன்றியமையாததாகும். ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மோசமானது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். அங்கு நீதி வெல்லும் என்று நம்புகிறோம்'' என்றார்.

தலைவர்கள் கருத்து
இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும், கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் அரசு பியூ கல்லூரி மாணவிகள் தேர்வை புறக்கணித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications