Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிஜாப்.. உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியில்லை.. உச்சநீதிமன்றத்தில் நீதி வெல்லும்: மனுதாரர்களின் வக்கீல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ‛‛ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமில் பின்பற்றும் நடைமுறைகளில் இன்றியமையாததாகும். ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மோசமானது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். அங்கு நீதி வெல்லும் என்று நம்புகிறோம்'' என மனுதாரர்களின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஎம் தார் கூறினார்.

Recommended Video

    ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமில்லை - கர்நாடக உயர் நீதிமன்றம்

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் முதன் முதலாக ஹிஜாப் பிரச்சனை உருவானது. ஹிஜாப்புக்கு, ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் மாணவர்கள் போராட தொடங்கினர்.

    சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும் கல்லூரிகளில் சீருடை முறையை பின்பற்ற கர்நாடக அரசும் உத்தரவிட்டது.

    வழக்கு

    வழக்கு

    இந்நிலையில் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி மாவட்ட மாணவிகள் தனித்தனியே கர்நடாக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுக்கள் மீது நீதிபதி கிருஷ்ண தீட்சித் விசாரித்தார். அதன்பிறகு வழக்கு மூவர் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.

    தடை செல்லும்

    தடை செல்லும்

    ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும் ஹிஜாப்புக்கு அனுமதி கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தீர்ப்பு குறித்து அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், ‛‛கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் தடையை உறுதி செய்கிறது. தனிநபர் விருப்பத்தை விட கல்வி நிறுவனங்களில் ஒழுக்கத்தை மேலோங்க செய்துள்ளது'' என்றார்.

    மோசமான தீர்ப்பு

    மோசமான தீர்ப்பு

    இந்த தீர்ப்பு குறித்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஎம் தார் கூறுகையில், ‛‛ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமில் பின்பற்றும் நடைமுறைகளில் இன்றியமையாததாகும். ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மோசமானது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். அங்கு நீதி வெல்லும் என்று நம்புகிறோம்'' என்றார்.

     தலைவர்கள் கருத்து

    தலைவர்கள் கருத்து

    இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும், கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் அரசு பியூ கல்லூரி மாணவிகள் தேர்வை புறக்கணித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+