இந்தி மொழி தினத்தை குமாரசாமி எப்படி எதிர்க்கலாம்? தாய்மொழி மட்டுமா முக்கியம்? கேட்கிறது கர்நாடக பாஜக
பெங்களூர்: கர்நாடகாவில் இந்தி மொழி தினத்தை மாநில பாஜக அரசு நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. ஆனால் இந்தி மொழி தினத்தை கூட எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், அரசியலாக்குவதாக மாநில கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் கடுமையாக சாடியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ந் தேதி இந்தி மொழி தினம் விவகாரம் கர்நாடகாவில் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டுதான் இருக்கிறது. தேசிய மொழியாக இந்தியை மெண்மையாக திணிப்பதுதான் இந்தி திவாஸ் என்கிற இந்தி மொழி தினத்தின் நோக்கம். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும்தான் மத்திய அரசு கொண்டாட வேண்டும் என்பது கர்நாடகாவில் பொதுவாக முன்வைக்கப்படும் கோரிக்கை.

கடந்த சில மாதங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழி குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல- ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த ஆண்டும் கர்நாடகாவில் இந்தி மொழி தின கொண்டாட்டம் சர்ச்சையாகி உள்ளது. நாளை கர்நாடகா மாநில பாஜக அரசு இந்தி மொழி தினத்தை கொண்டாட உள்ளது. இதற்கு முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜேடிஎஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு அனுப்பிய கடிதத்தில்.. கர்நாடகாவில் இந்தி மொழி தினம் கொண்டாடுவது என்பது கன்னட மொழி பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். கன்னட மொழி பேசும் மக்களின் வரிப்பணத்தில் எதற்காக இந்தி தினத்தை கொண்டாட வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் நாளை கர்நாடகாம் முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இப்பிரச்சனை தொடர்பாக கர்நாடக கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் கூறியதாவது: தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம். தாய்மொழிக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். அதேநேரத்தில் இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் கூட முக்கியத்துவம் தர வேண்டும். கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் இந்தி மொழி தினம் கொண்டாடுவதை அரசியலாக்குகின்றன. இவ்வாறு நாகேஷ் கூறினார்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications