தேர்தலுக்கு முன் தொடரும் மதமோதல்.. இந்து அமைப்பு தலைவர் மீது துப்பாக்கிச் சூடு.. பீதியில் கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெலகாவியில் ஓர் இந்து அமைப்பின் தலைவர் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெலகாவியின் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அசம்பாவிதத்தை தவிர்க்க அங்குள்ள நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்ய 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வட மாநிலமாக மாறும் கர்நாடகா?
பொதுவாக, இந்தியாவில் மத ரீதியாலான மோதல்களும், கலவரங்களும் வட மாநிலங்களில்தான் அதிகம் நடைபெறும். ஆனால், சமீபகாலமாக அந்த வரலாற்றை மாற்றி எழுதி வருகிறது கர்நாடகா. தென் மாநிலங்ளில் மதம் சார்ந்த வெறுப்பு பேச்சுகளும், மோதல்களும் அதிகம் நிகழும் மாநிலமாக கர்நாடகா மாறி வருவது அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக, கர்நாடகாவின் ஷிவமொக்கா, மங்களூர், பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற சம்பவங்களை அதிகம் பார்க்க முடிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, ஷிவமொக்காவில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும், முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அப்படியொரு பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஸ்ரீராம் சேனா தலைவர்
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹிண்டலகா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி கோகிடகேரா (39). இவர் ஸ்ரீராம் சேனா அமைப்பின் பெலகாவி மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். சில முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ந்து இவர் பங்கேற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று ஹிண்டல்கா பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் இருந்து பெலகாவிக்கு அவர் திரும்பிக் கொண்டிருந்தார். காரை அவரது டிரைவர் ரமேஷ் ஓட்டிச் சென்றார்.

துப்பாக்கிச் சூடு
அப்போது பெலகாவி அருகே வந்த போது, ஒரு ஸ்பீடு பிரேக்கரில் அவரது கார் ஏறி இறங்கியுள்ளது. ஸ்பீடு பிரேக்கரை கார் மெதுவாக கடந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர், கார் ஜன்னலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், துப்பாக்கி குண்டு ரவி கோகிடகேராவின் முகத்தில் பாய்ந்தது. இன்னொரு குண்டு டிரைவர் ரமேஷின் கையில் பாய்ந்தது. இதனால் கட்டுப்பாட்டை மீறிய கார், அங்குள்ள மரத்தில் வேகமாக மோதி நின்றது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரவியையும், டிரைவர் ரமேஷையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முகத்தில் குண்டு பாய்ந்து அதிக ரத்தம் வெளியேறியதால் தீவிர சிகிச்சை பிரிவில் ரவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதற்றம் - போலீஸ் குவிப்பு
இந்த சம்பவம் குறித்த தகவல் வெளியானதும், ஸ்ரீராம் சேனா, அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும், பாஜகவினரும் பெலகாவியில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க நூற்றுக்கணக்கான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பிடிக்க 10 தனிப்படைகளை காவல்துறை அமைத்துள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications