போலீஸுக்கு போக்குக் காட்டி வந்த மணிகண்டன் பெங்களூரில் கைதானது எப்படி?.. பரபர பின்னணி!
பெங்களூர்: பெங்களூரில் நண்பர் ஒருவரது பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
Recommended Video
மலேசிய சுற்றுலாத் துறை அதிகாரி சாந்தினி. இவர் நாடோடிகள் படத்தில் துணை நடிகையாக நடித்திருப்பார். அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுக்கு சாந்தினியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மாறியது. மணிகண்டனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக சாந்தினியுடன் மணிகண்டன் குடும்பம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

மாத்திரை
மேலும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த மணிகண்டன், எப்போது சென்னை வந்தாலும் சாந்தினியுடன் இரவு தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இதன் விளைவாக சாந்தினி 3 முறை கருத்தரித்தார். அவருக்கு மருத்துவர் நண்பர் மூலம் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார் மணிகண்டன்.

உடல்நிலை பாதிப்பு
இதனால் சாந்தினியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட மணிகண்டன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் இரு தனிப்படை அமைத்து போலீஸார் மணிகண்டனை தேடி வந்தனர்.

இரு போன்கள்
அவரது இரு செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் போலீஸாருக்கு அவர் இருக்கும் இடத்தை அறிவதில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து மணிகண்டனின் நெருங்கிய நண்பர்களின் செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீஸ் மூலம் டிரேஸ் செய்தனர்.

பெங்களூர்
அதில் நெல்லையில் ஒரு சிக்னல் காட்டியுள்ளது. அங்கு போய் விசாரித்ததில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மதுரையில் மணிகண்டனின் நண்பர் இருப்பதாக டவர் காட்டியது. ஆனாலும் அவர் அங்கும் இல்லை. இதையடுத்து ஒரு செல்போன் சிக்னல் பெங்களூரில் காட்டியது.

ரகசிய இடத்தில் விசாரணை
இதை வைத்து தனிப்படை போலீஸார் அங்கு சென்றனர். அந்த செல்போன் மணிகண்டனின் நண்பருடையது என தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் மணிகண்டன் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த தனிப்படை போலீஸார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications