பாபர் மசூதி இடிப்பு வன்முறை.. 31 ஆண்டுக்கு பின் கர்நாடகாவில் கைதான நபருக்கு ஜாமீன்.. கோர்ட் உத்தரவு
பெங்களூர்: பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு நடந்த வன்முறையில் கடைகளுக்கு தீவைத்த வழக்கில் 31 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகாவில் ஸ்ரீகாந்த் பூஜாரி என்பர் தற்போது கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து பாஜக பெரிய அளவில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி கும்பாபிேஷகம் நடத்தப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்பட ஏராளமானவர்கள் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் நாடு முழுவதும் இருந்து சாமியார்கள், மடாதிபதிகள் விழாவில் பங்கேற்க உள்ளனர். இதனால் அயோத்தி நகரமே தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதற்கிடையே தான் கர்நாடகாவில் பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது 1992ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து பெரிய அளவில் வன்முறைகள் வெடித்தன. அப்போது தார்வார் மாவட்டம் உப்பள்ளி சென்னபேட்டையை சேர்ந்த இந்து அமைப்பை ஸ்ரீகாந்த் பூஜாரி என்பவர் வன்முறையில் ஈடுபட்டு சில கடைகளுக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கில் 31 ஆண்டுகளுக்கு பிறகு சில நாட்களுக்கு முன்பு திடீரென்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடகா முழுவதும் பாஜக சார்பில் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தான் கைது செய்யய்பட்ட ஸ்ரீகாந்த் பூஜாரி சார்பில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீகாந்த் பூஜாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து நாளை ஸ்ரீகாந்த் பூஜாரி சிறையில் இருந்து வெளியே வர உள்ளார். இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் சஞ்சீவ் படாசகா கூறுகையில், ‛‛நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்ற உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். நீதிமன்றம் உத்தரவின் நகல் இன்னும் வரவில்லை. நாளை ஸ்ரீகாந்த் பூஜாரி சிறையில் இருந்து வெளியே வர உள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications