லப்டப்.. லப்டப்.. பெங்களூர் மெட்ரோ ரயிலில் உயிருடன் துடித்த இதயம்.. டாக்டர்கள் செய்த தரமான சம்பவம்
பெங்களூர்: பெங்களூரில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவமனைக்கு இதயம் எடுத்து செல்லப்பட்டு உரியவருக்கு சரியான நேரத்தில் பொருத்தப்பட்டது. இதுதொடர்பான போட்டோக்கள் வெளியான நிலையில் டாக்டர்கள் குழு, பெங்களூர் மெட்ரோ நிர்வாகத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பெங்களூரை எடுத்து கொண்டால் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலாக தான் இருக்கும். குறிப்பாக முக்கிய சாலைகளில் வாகனங்களில் பயணிப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் பெங்களூரில் சாலை மார்க்கமாக உடல் உறுப்புகளை எடுத்து சென்று ஒருவருக்கு பொருத்துவது பெரிய சவாலாக இருக்கும்.

இந்நிலையில் தான் போக்குவரத்து நெரிசலை அறிந்த மருத்துவர்கள் ஒரு மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவமனைக்கு மெட்ரோ ரயிலில் இதயத்தை எடுத்து சென்று வெற்றிகரமாக பொருத்தி உள்ளனர்.
இதயம் தானம்
பெங்களூர் யஷ்வந்தபுரத்தில் ஸ்பார்ஷ் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவரை இனி பிழைக்க வைக்க முடியாத நிலை வந்தது. இதையடுத்து அவரது இதயத்தை தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
மெட்ரோ ரயிலில் இதயம்
இதையடுத் அந்த நபரிடம் இருந்து இதயம் தானமாக பெறப்பட்டது. அந்த இயத்தை பெங்களூர் தெற்கு பரேட் மைதானத்தின் மெட்ரோ நிலையத்தின் அருகே உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதயத்தை சாலை மார்க்கமாக எடுத்து சென்றால் அதிக நேரம் எடுக்கும். இதனால் இதயத்தை சரியான நேரத்தில் பொருத்த முடியாமல் போகலாம். இதனால் டாக்டர்கள் மெட்ரோ ரயிலில் இதயத்தை எடுத்து செல்ல முடிவு செய்தனர்.
20 நிமிட பயணம்
அதன்படி நேற்று முன்தினம் இரவில் 7 டாக்டர்கள் கொண்ட குழுவினர் யஷ்வந்தபுரத்தில் உள்ள ஸ்பார்ஷ் மருத்துவமனையில் இருந்து இதயத்தை தானமாக பெற்று மெட்ரோ ரயிலில் பயணித்தனர். இரவு 11.01 மணிக்கு அவர்கள் மெட்ரோ ரயிலில் ஏறினர்.
20 நிமிடத்தில் 7 மெட்ரோ ரயில் நிலையங்களை கடந்து அந்த இதயம் இரவு 11.21 மணிக்கு பரேட் கிரவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்றது. அங்கிருந்து உடனடியாக இதயம் அப்போலோ மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு வெற்றிகரமாக இன்னொருவருக்கு பொருத்தப்பட்டது.
ஆபரேஷன் சக்சஸ்
மெட்ரோ ரயிலுக்கு பதில் டாக்டர்கள் காரில் இதயத்தை எடுத்து சென்றிருந்தால் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை ஆகி இருக்கும். மெட்ரோ ரயிலை டாக்டர்கள் தேர்வு செய்ததால் இதயம் உரிய நேரத்தில் இன்னொருவருக்கு பொருத்தப்பட்டது. பெங்களூரை எடுத்து கொண்டால் மெட்ரோ ரயில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல.
2வது முறை
இதற்கு முன்பு அதாவது கடந்த மாதம் ஒயிட்பீல்டு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ராஜராஜேஸ்வரி மெட்ரோ ரயில் நிலையம் வரை மனிதனின் கல்லீரல் எடுத்து சென்று இன்னொருவருக்கு பொருத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இப்போது இதயம் மெட்ரோ ரயிலில் எடுத்து சென்று இன்னொருவருக்க வாழ்க்கையை அளித்துள்ளது.
-
அடுத்த பாண்டிச்சேரியாக மாறும் பெங்களூர்! பீர் விலை அப்படியே குறையுது.. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம்












Click it and Unblock the Notifications