Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓடும் பைக்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கைதான ரேபிடோ கேப்டன் சொன்ன காரணம்.. அதிர்ந்த பெங்களூர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் 20 வயது இளம்பெண்ணை பைக்கில் அழைத்து செல்லும்போது ரேபிடோ பைக் கேப்டன் (ஓட்டுநர்) அவரது காலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனை அந்த இளம்பெண் வீடியோவாக எடுத்து வெளியிட்ட நிலையில் போலீசார் ரேபிடோ பைக் கேப்டனை கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர், ‛‛சார் நான் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. எனக்கு உடலில் அரிப்பு பிரச்சனை உள்ளது. அந்த இடத்தை தான் கைகளால் தொட்டேன்'' என்று கூறியுள்ளார்.

பெங்களூரில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பெங்களூருவுக்கு புதியவர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் வெளியூரை சேர்ந்த 20 வயது பெண் பெங்களூர் வந்தார். அவர் Cabin Crew பணிக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

i-was-trying-to-rub-my-back-rapido-driver-who-arrested-after-sexually-harassing-a-20-year-woman-i

இந்த இளம்பெண் பெங்களூர் சுதாமநகரில் உள்ள பிஜியில் தங்கி உள்ளார். இந்நிலையில் தான் கடந்த 6ம் தேதி இளம்பெண் ‛ரேபிடோ' பைக்கில் பயணித்தார். அப்போது பைக் கேப்டன் (ஓட்டுநர்) இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக அவரது காலை பலமுறை தொட்டுள்ளார்.

இதற்கு இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் வாகனத்தை நிறுத்தும்படி கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை. வாகனத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த இளம்பெண் வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானது. ரேபிடோ கேப்டனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு ரேபிடோ கேப்டனை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவரது பெயர் லோகேஷ் (வயது 28). பெங்களூர் உல்லால் பகுதியில் உள்ள முனியப்பா லே-அவுட்டில் வசித்து வருவது தெரியவந்தது. மேலும் போலீசாரிடம் கேட்டபோது, ‛தனது உடலில் பின்பக்கத்தில் அரிப்பு உள்ளது. உடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் எனது பின்பகுதியில் அரிப்பு எடுத்த இடத்தை தான் தொட்டேன். பாலியல் தொல்லை கொடுக்கவில்லை'' என்று கூறினார். ஆனால் போலீசார் நம்பவில்லை.

இதுபற்றி பெங்களூர் மத்திய மண்டல துணை கமிஷனர் அக்சய்எம் ஹாஹே கூறுகையில், ‛‛பெண் பதிவிட்ட வீடியோ அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தோம். எங்களின் சோசியல் மீடியா டீம் பாதிக்கப்பட்ட பெண்ணை தொர்டு கொண்டு பேசினயது. அவர் போீஸ் நிலையம் வந்து புகாரளித்தார். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 75ன் (பாலியல் தொல்லை) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+