Ilayaraja Music Concert: பெங்களூர் மக்களே இசை மழையில் நனைய தயாரா.. ஜனவரி 10ஆம் தேதி இளையராஜா கச்சேரி
பெங்களூரு: இசைஞானி என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா இசைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, பெங்களூரில் ஜனவரி 10 ஆம் தேதி இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்தவுள்ளார்.
தமிழ் ரசிகர்களை இன்றும் தன் இசையால் கட்டிப் போட்டு வைத்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் இசைஞானி இளையராஜா. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 7 ஆயிரத்துக்கும் அதிகமானப் பாடல்களைக் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். உண்மையிலேயே இசைஞானி என்ற பெயர் அவருக்கு மட்டுமே பொருந்தும் என்பதை அவரது ஒவ்வொரு பாடல்களும் சொல்லும்.

'அன்னக்கிளி' படத்தின் மூலம் 1976ல் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய இளையராஜா, மேற்கத்திய மற்றும் இந்திய சங்கீதத்தை இணைத்து 'சிம்பொனி' வடிவில் இசையமைத்த முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையையும் பெற்றவர். திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து வருகிறார்.
இசையமைப்பாளர் இளையராஜா இசைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, பெங்களூரில் ஜனவரி 10 ஆம் தேதி இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்தவுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 23 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் அக்சய பாத்ரா பவுண்டேஷனின் வெள்ளி விழாவையொட்டி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இசைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பெங்களூருவில் வரும் ஜனவரி 10-ம் தேதி இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் இளையராஜா நடத்தவுள்ளார். அக்சய பாத்ரா பவுண்டேஷனின் வளர்ச்சி நிதிக்காக இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications