மநீமதான் ஒரே வழி.. கமல்ஹாசனின் வழியை பின்பற்றும் பிரகாஷ் ராஜ்.. அசத்தல் யோசனை!
Recommended Video
பெங்களூர்: நடிகர் பிரகாஷ்ராஜ் தேர்தல் தோல்வியை தொடர்ந்து புதிய கட்சியை தொடங்கும் முடிவில் இருக்கிறார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பாணியில் செயல்பட இவர் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.
பிரபல கர்நாடக எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் 2.5 வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இவரின் கொலையை தொடர்ந்து கொதித்தெழுந்த பிரகாஷ் ராஜ் அரசியலில் குதித்தார்.
பாஜகவிற்கு எதிராக கடுமையாக பேசி வந்த பிரகாஷ் ராஜ் தேர்தலில் நிற்க போவதாக அறிவித்தார். அதேபோல் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார்.
தோத்துட்டீங்க... பரவாயில்ல..!! பயம் மட்டும் இருக்கக் கூடாது.. இந்திய அணிக்கு சச்சின் அட்வைஸ்

எங்கு போட்டி
கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார். சமூக செயற்பாட்டாளர்கள், ஆம் ஆத்மி கட்சியினர் இவருக்கு ஆதரவு அளித்தனர். நடிகர் பிரகாஷ்ராஜூக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தோல்வி அடைந்தார்
ஆனால் இந்த தேர்தலில் பிரகாஷ்ராஜ் மோசமாக தோல்வி அடைந்தார்.மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் பிரகாஷ் ராஜ் மூன்றாவது இடம்தான் பிடித்தார். முதல் இடத்தில் பாஜகவின் பிசி மோகன் 6 லட்சம் வகுக்கள் பெற்றார். மூன்றாம் இடம் பெற்ற வெறும் 28,000 வாக்குகள் மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சி தொடங்க முடிவு
பிரகாஷ்ராஜ் தேர்தல் தோல்வியை தொடர்ந்து புதிய கட்சியை தொடங்கும் முடிவில் இருக்கிறார். விரைவில் கட்சியை தொடங்கி அதை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து பேட்டி அளித்த அவர், நான் அரசியலில் இனிதான் தீவிரமாக களமிறங்க போகிறேன். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டேன். இன்னும் சில நாட்களில் கட்சி தொடங்க போகிறேன்.

போட்டி
இன்னும் சில மாதங்களில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இதில் நான் கட்சி தொடங்கி போட்டியிடுவேன். அடிமட்டத்தில் இருந்து கட்சியை வளர்க்க திட்டமிட்டு இருக்கிறோம். மக்களுக்காக தொடர்ந்து களத்தில் பணியாற்ற போகிறேன், என்று பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டு இருக்கிறார்.

திட்டங்களை விவரித்தார்
இந்த நிலையில் இவர் தனது தேர்தல் திட்டங்கள் குறித்தும் விவரித்து இருக்கிறார். அதில், இப்போது சிறிய கட்சி தொடங்கி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளார். அதன் பின் சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் களமிறங்க முடிவெடுத்து இருக்கிறார். இதற்கு இடையில் படத்தில் நடிக்கவும் பிரகாஷ் ராஜ் திட்டமிட்டுள்ளார்.

திட்டம் என்ன
அதன்படி பிரகாஷ் ராஜ் படத்தில் நடித்துக் கொண்டே அரசியலில் ஈடுபட உள்ளார். இவர் பெரும்பாலும் மக்கள் நீதி மய்யம் ஸ்டைலில் அரசியல் செய்வார் என்று கருதப்படுகிறது. கமல்ஹாசன் போல ஒவ்வொரு பகுதியிலும் தனது கட்சியை இவர் வளர்த்தெடுக்க போகிறார் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யம் இந்த லோக்சபா தேர்தலில் சிறப்பாக செயலாற்றியது. அதனால் பிரகாஷ் ராஜ் கட்சி தொடங்க விரும்பி இருக்கலாம் என்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications