நிலவை நெருங்கிய நிலையில் 400 மீட்டர் தூரத்தில்தான் கட் ஆகியுள்ளது விக்ரம்.. 2.1 கி.மீ இல்லையாம்!
Recommended Video
பெங்களூர்: இஸ்ரோவுடனான விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது, அது நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ. உயரத்தில் இருக்கும் போது என்ற தகவல் தவறானது. உண்மையில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் உயரத்தில் தகவல் துண்டிக்கப்பட்டது.
சந்திரயான் -2 விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அமைப்புகள் உள்ளன.
இதில் லேண்டர் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ. தூரத்தில் இருந்த போது இஸ்ரோவுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆர்பிட்டர்
இதையடுத்து நிலவிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர், லேண்டர் தரையிறங்கியதையும் அது சாய்வாக உள்ளதையும் படம் பிடித்து அனுப்பியது. இந்த நிலையில் ஆர்பிட்டரின் தொடர்பை பெற விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

7 ஆண்டுகள்
இந்த நிலையில் அதனுடனான தொடர்பை பெறுவது என்பது சற்று கடினம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதனால் ஆர்பிட்டரின் ஆயுட்காலத்தை ஓராண்டிலிருந்து 7 ஆண்டுகளாக இஸ்ரோ நீட்டித்தது. தற்போது லேண்டர் தரையிறங்குவது குறித்து ஒரு கிராப் வெளியாகியுள்ளது.

பச்சை நிறம்
அதில் 3 கோடுகள் உள்ளன. மத்தியில் உள்ள கோடு விக்ரம் லேண்டர் தரையிறங்க வேண்டிய இடத்தை குறிக்கிறது. சிவப்பு நிற கோடு விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ள இடத்தை குறிக்கிறது. அது போல் பச்சை நிறம் விக்ரம் லேண்டரின் சரியான பாதையை குறிக்கிறது.

தகவல்
இந்த கோடுகளை பார்க்கும் போது லேண்டர் நிலவில் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு 400 மீட்டர் உயரம் இருந்த போது இஸ்ரோவுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. எனினும் அது தரையிறங்கியது. ஆனால் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது குறித்து இஸ்ரோ எந்த வித தகவலையும் தெரிவிக்கவில்லை.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications