ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம்.. 6 நிறுவன சொத்து பட்டியல் பெங்களூர் நீதிமன்றத்தில் தாக்கல்
பெங்களூர்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவனங்களில் சொத்துகளின் பட்டியலை தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணமடைந்தார். இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்தனர். தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் அவர்கள் 3 பேரும் விடுதலையாகினர்.
இதற்கிடையே தான் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விடுவது தொடர்பான வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜெயலலிதாவிடம் இருந்து ஏராளமான பட்டுப்புடடைவகள், தங்க வைர நகைகள், காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் பெங்களூரில் உள்ள கருவூலத்தில் உள்ளது. இந்த கருவூலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சேலைகள், 750 ஜோடி காலணிகள், கைக்கெடிகாரங்கள், தங்க, வைர நகைகள் இருக்கின்றன.
இந்நிலையில் தான் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்களை ஏலம்விட கர்நாடக அரசு வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது. அதன்படி கிரண் எஸ் ஜாவலியை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது. இந்நிலையில் தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் துணை கண்காணிப்பாளர் புகழ் வேந்தன் ஆஜரானார். அப்போது அவர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவனங்களின் சொத்துகளின் பட்டியலை தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மேலும் சென்னை அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கியின் கிளையில் கடந்த 1996ம் ஆண்டு ஜெயலலிதா தனது பெயரில் 2 வங்கி கணக்குகளில் தலா ரூ.25 லட்சத்தை வைப்புநிதியாக (Fixed Deposit) வைத்திருந்ததாகவும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதனை யாரும் உரிமை கோராத காரணத்தினால் இடைநீக்கம் செய்ததாக கனரா வங்கி தரப்பில் சட்ட ஆலோசகர் ஸ்ரேயா தெரிவித்தார்.
கனரா வங்கியின் இந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. அந்த கணக்குகளை மீட்டெடுத்து வட்டியுடன் சேர்த்து பெங்களூர் நீதிமன்ற பதிவாளர் பெயரில் மாற்றி கொடுக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார். அதோடு அபராத தொகை, வழக்கு செலவு போக மீதமுள்ள தொகையை வைத்து தமிழ்நாட்டில் கழிவறைகள் கட்டலாமே எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications