Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம்.. 6 நிறுவன சொத்து பட்டியல் பெங்களூர் நீதிமன்றத்தில் தாக்கல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவனங்களில் சொத்துகளின் பட்டியலை தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

 Jayalalithaa Asset Case Auction: TN Police submitted 6 Benami Companies assets list to Bangalore special court

ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணமடைந்தார். இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்தனர். தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் அவர்கள் 3 பேரும் விடுதலையாகினர்.

இதற்கிடையே தான் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விடுவது தொடர்பான வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜெயலலிதாவிடம் இருந்து ஏராளமான பட்டுப்புடடைவகள், தங்க வைர நகைகள், காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் பெங்களூரில் உள்ள கருவூலத்தில் உள்ளது. இந்த கருவூலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சேலைகள், 750 ஜோடி காலணிகள், கைக்கெடிகாரங்கள், தங்க, வைர நகைகள் இருக்கின்றன.

இந்நிலையில் தான் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்களை ஏலம்விட கர்நாடக அரசு வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது. அதன்படி கிரண் எஸ் ஜாவலியை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது. இந்நிலையில் தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் துணை கண்காணிப்பாளர் புகழ் வேந்தன் ஆஜரானார். அப்போது அவர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவனங்களின் சொத்துகளின் பட்டியலை தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மேலும் சென்னை அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கியின் கிளையில் கடந்த 1996ம் ஆண்டு ஜெயலலிதா தனது பெயரில் 2 வங்கி கணக்குகளில் தலா ரூ.25 லட்சத்தை வைப்புநிதியாக (Fixed Deposit) வைத்திருந்ததாகவும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதனை யாரும் உரிமை கோராத காரணத்தினால் இடைநீக்கம் செய்ததாக கனரா வங்கி தரப்பில் சட்ட ஆலோசகர் ஸ்ரேயா தெரிவித்தார்.

கனரா வங்கியின் இந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. அந்த கணக்குகளை மீட்டெடுத்து வட்டியுடன் சேர்த்து பெங்களூர் நீதிமன்ற பதிவாளர் பெயரில் மாற்றி கொடுக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார். அதோடு அபராத தொகை, வழக்கு செலவு போக மீதமுள்ள தொகையை வைத்து தமிழ்நாட்டில் கழிவறைகள் கட்டலாமே எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+