Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிவி வேணும்.. அப்பறம் இந்தியன் டாய்லெட் செட் ஆகலை.. மீண்டும் சர்ச்சையில் கன்னட நடிகர் தர்ஷன்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட நடிகர் தர்ஷன், தன்னுடைய ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஏற்கனவே சிறையில் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான போட்டோ, வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறை மாற்றப்பட்ட தர்ஷன், தன்னுடைய செல்லில் டிவி ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ரேணுகாசாமி. இவர் கன்னட நடிகர் தர்ஷன் தொகுதீபவின் தீவிர ரசிகர். இவர் தர்ஷனின் பெண் தோழியான பவித்ரா என்பவரை திட்டி மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் காட்டுத் தீயாக பரவியது. இதையடுத்து ரேணுகாவை கடத்தி வந்து, சித்திரவதை செய்து கொலை செய்தனர்.

darshan jail

இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா உள்ளிட்ட17 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். தர்ஷன் பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் கொலை வழக்கில் கைதாகியுள்ளோம் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல், கொண்டாட்ட மனநிலையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த புகைப்படங்கள் வெளியாகின.

ஒரு கையில் காபி கோப்பை, இன்னொரு கையில் சிகரெட்டுடன் சுற்றுலா சென்றது போல தர்ஷன் உற்சாகத்தில் இருந்தார். இது சர்ச்சையானதால், தர்ஷன் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து, பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். பெங்களூரு காவல்துறை சமீபத்தில்தான், இந்த கொலை வழக்கு தொடர்பாக சுமார் 4,000 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

ஏற்கனவே எக்கச்சக்க சர்ச்சைகளில் சிக்கியதால், தர்ஷன் இனியாவது அமைதியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டும் அவர் திருந்தவில்லை. சிறைத்துறை அதிகாரிகளிடம் தர்ஷன், தன்னுடைய செல்லுக்கு ஒரு டிவி கொடுக்க சொல்லி கேட்டுள்ளார்.

"டிவி ஒதுக்கினால், என் வழக்கு சம்மந்தப்பட்ட தகவல்களை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும். அதேபோல, வெளி உலக நிலவரங்களையும் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்." என்று கேட்டிருக்கிறார். இந்தத் தகவல் வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "சிறை விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் படி அவரது செல்லில் டிவி ஒதுக்க முடிவு செய்துள்ளோம்." என்று கூறியுள்ளனர். இதையடுத்து, தர்ஷன் செல்லுக்கு 32 இன்ச் டிவி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் சர்ஜிக்கல் சேர் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல இந்தியன் டாய்லெட்டை பயன்படுத்த முடிவதில்லை என்றும் கூறியுள்ளார்.

போன்கால் செய்வதற்கும் அவர் அனுமதி வாங்கியுள்ளார். அவரின் பர்சனல் வங்கிக் கணக்கில் ரூ.35,000 செலுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்து இந்த வசதிகளை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது ஒருபக்கம் சர்ச்சையை ஏற்படுத்த, மறுபக்கம் குற்ற பத்திரிக்கையில் உள்ள தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. தனது ரசிகர் ரேணுகாசாமியை ஆட்கள் வைத்து கடத்தி, ஒரு ரகசிய ஷெட்டுக்கு அழைத்து வந்து, அவரை முதலில் தாக்கியது தர்ஷன் தான். பலரும் இணைந்து இந்த கொடுமையை அரங்கேற்றியுள்ளனர்.

அப்போது ரேணுகாசாமி, 'பசிக்கிறது' என்று கூறியுள்ளார். அதற்கு சிக்கன் பிரியாணி கொடுக்கப்பட்டுள்ளது. அதை ரேணுகாசாமி துப்பியதற்கு, தர்ஷன் அவரை மீண்டும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். பவித்ரா தான் இந்த வழக்கின் மூளையாக செயல்பட்டுள்ளார். என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+