“யோகி மாடலை” தொடங்கிய கர்நாடக அரசு.. ஆனால் சிறிய மாற்றம்! மாட்டிறைச்சி விற்றவருக்கு ஏற்பட்ட நிலை
பெங்களூரு: கர்நாடகாவில் மாட்டிறைச்சி விற்பனை செய்த நபரின் வீட்டுக்கு வழங்கப்பட்டுவந்த மின் இணைப்பை நகராட்சி நிர்வாகம் துண்டித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகாவிலும் ஹிஜாப், ஹலால், ஒலிபெருக்கி, மாட்டிறைச்சி என அடுத்தடுத்து மதம் சார்ந்த சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல்கள், கலவரங்கள், கொலைகள் தொடர்கதையாகி இருக்கின்றன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்நாடகாவை சேர்ந்த பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி, கர்நாடகாவில் உத்தரப்பிரதேசத்தின் புல்டோசர் மாடலை கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

பாஜக நிர்வாகி கொலை
இந்த நிலையில் கடந்த மாதம் கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டம் மங்களூருவில் மாவட்ட பாஜக இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். பிரவீன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.

எச்சரித்த கர்நாடக முதலமைச்சர்
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முழு அடைப்பை மீறி இயக்கப்பட்ட பேருந்துகள் மீது அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் மாவட்டமே வன்முறை களமாக மாறியது. இதன் தொடர்ச்சியாக பாஜகவிலிருந்து ஏராளமானோர் விலகுவதாக அறிவித்தனர். இதுகுறித்து பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "இதுபோன்ற நிலை கர்நாடகத்தில் தொடர்ந்தால், யோகியின் மாடலை கையில் எடுக்க வேண்டிய நிலை வரும்." என்றார்.

மாட்டிறைச்சி வியாபாரி
இந்த நிலையில் சிக்கமகளூரு பகுதியில் சபியுள்ளா என்ற நபர் வீட்டில் மாட்டிறைச்சியை விற்பனை செய்து வந்து இருக்கிறார். இதுகுறித்து நகராட்சித் தலைவருக்கு ரகசிய தகவல் கிடைத்து இருக்கிறது. இதனை அடுத்து அதிகாரிகள் போலீசாருடன் சபியுல்லாவின் வீட்டுக்கு சென்றனர். இதனை முன்கூட்டியே தெரிந்துகொண்ட சபியுல்லா அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

யோகி மாடல் நடவடிக்கை
சபியுல்லாவின் வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் 100 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து மாநில மின்வாரிய ஊழியர்களை அழைத்து சபியுல்லாவின் வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர். தப்பிச்சென்ற மாட்டிறைச்சி வியாபாரி சபியுல்லா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
-
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications