கர்நாடகாவில் கன்னடர்களுக்கு...வேலை வாய்ப்பில் முன்னுரிமை...விரைவில் உத்தரவு!!
பெங்களூரு: கர்நாடகாவில் கன்னடர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் முன்னிரிமை வழங்க வேண்டும் என்று அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான உத்தரவை பிறப்பிக்க இருக்கிறது.
இதுகுறித்து மாநில சட்டத்துறை அமைச்சர் ஜெசி மதுசுவாமி கூறுகையில், ''விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த உத்தரவு அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் மாடலை கர்நாடகாவும் பின்பற்றும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

சி அண்ட் டி துறையின் கீழ் மெக்கானிக், கிளார்க், அக்கவுண்ட்ஸ், சூப்பர் வைசர்கள், பியூன், ஹெல்பர்கள் இடம் பெறுவர். ஏ அண்ட் பி துறைகளின் கீழ் மேலாளர் அளவில் பணியாற்றுபவர்கள் இடம் பெறுவார்கள். இந்தத் துறைகளில் கண்டிப்பாக கன்னடகர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்றைய கவுன்சில் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்சி பசவராஜ் ஹோரட்டி கேள்வி எழுப்பி இருந்தார். மற்ற மாநிலங்களில் அந்தந்த மொழி பேசுபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், கர்நாடகாவில் என்ன நிலைமை என்பதை விளக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். மற்ற மாநிலங்களில் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க உத்தரவிட்டுள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் கர்நாடகா தொழிற்சாலை வேலை வாய்ப்பு சட்டத்தின் கீழ் தனியார் தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டு இருந்தது.
இந்த அரசாணையின்படி, கர்நாடகாவில் 15 ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்து, கன்னடம் படிக்க, எழுதத் தெரிந்தவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கிளார்க் மற்றும் மெக்கானிக் போன்ற வேலைகளை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இவர்கள் அரசு வேலைக்கும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் இந்த அரசாணையை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை கட்டாயப்படுத்த அரசுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்து இருந்தது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications